*
கலைகளில் பரதம்.
*
பரதமுனிவர் அறிமுகமாக்கிய உயரிய கலை
பாவம், ராகம், தாளமிணைந்த சொல்
தேவதாசிகளின் சதிராட்டத்தின் நெறிப்படுத்திய
வடிவம். சின்ன மேளம், கூத்தாடல்
தாசி ஆட்டம். எழுபதாண்டுகளாகப் பரதமானது.
*
முகபாவனைகளில் நவரசங்கள் பிறக்கும் அழகு
அகம் குளிரச் செய்யுமுடல் மொழி.
முத்திரையிடும் கைவழி கண்கள் செல்ல
கண்கள் வழியோடிதயமும் செல்லும் இன்பவழி.
பாவரசமிணைந்த அறுபத்து நான்கு கலைகளிலொன்று
*
.
சஞ்சலமின்றிச் சலங்கையைக் கண்களிலொற்றிப் பூசித்து
அஞ்சாது அழகு மயிலாக ஆட
கொஞ்சிடும் சலங்கை தவறாது தாளமிட
வஞ்சியவள் சந்தத்தில் பரவசமாய் ஆடுவாள்.
கெஞ்சிடும் மனம் இன்னொரு தடவையென்று.
*
கண்கள் கருவண்டாய்ச் சுழன்று மொய்க்க
அண்ணாவியசைவில் மேடையில் கால்கள் பாவாது
வண்ணமாய் ஒயிலாயாடி அபிநயத்தில் எண்ணத்தில்
கண்ணன் லீலைகள் விரிந்திட அழகுப்
பெண் ராதையைத் தேடுவதோ மீயழகு.
*
உடல், மனம், ரசனைக்குப் பயிற்சி
உன்னதத் தென்னிந்தியர் தமிழர் நடனம்
இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னைய உருவாக்கம்.
அடவு, ஐதி, பாடல் நட்டுவாங்கமென
இசைக் கருவிகளின் கூட்டுக் களியாடலுமாகும்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-5-2017
*
வேறு – குறுங்கவிதை.
பாவம் உணர்ச்சியை, ராகம் இசையைப்
பாவும் பரதமிந்திய புராதனக் கலை.
சிவன் மகிழ்வின் உச்சத்தில் ஆனந்தத்தாண்டவமும்
அழிக்கும் கடவுளாக ருத்ரதாண்டவமும் ஆடுகிறார்.
*
அபிநய வழி செய்தி பரிமாற்றம்
சுபசுரம் சதங்கை ஒலி பின்ன
செம்பஞ்சுக் குழம்பிட்ட பாதங்கள் சதிராட
அழகு மயிலென ஆடும் பரதம்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017
*
குறுங்கவிதைக் கருத்து:-
· 1 June -2017 at 13:08 ·
Suryajessy Jayavikash செம்பஞ்சுக் குழம்பிட்டப் பாதம் சதிராடியது..
நின் செம்மொழி வாய்மொழியாய் உதிர்ந்து..
செங்காந்தள் விரல் இசைந்து..
கவியானது..
எங்கள் விழிகளில் கலையானது..
பரதமிந்திய.. ஒற்றை வார்த்தையா? ஒரு சிறு குழப்பம்..
கவி..ஆகச் சிறப்பு.
· 1 June at 11:50 ·
Vetha Langathilakam:- Suryajessy Jayavikash ஆம் பரதம்- சக- இந்தியா – பரதமிந்திய mikka nanry..sis*’..
1 June – 2017 – at 11:58
Suryajessy Jayavikash நன்றிகள் சகோதரி. கவி மிக அருமை.. எனக்கும் உங்கள் வரிகளில் ஈர்ப்பு உண்டு.
LikeLike
Subajini Sriranjan :- உயிரின் அசைவும் உலகத்தின் அசைவும்
உள்ளடக்கும் பரதக்கலை//
அருமையான ஆக்கம்
· 3 June- 2017 – at 15:50
Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா…
Mathialagan Mathia :- மொத்தத்தில் உமது கவி நிலாமுற்றத்தில் அபிநயம் செய்கிறது பரத நாட்டியமாக …வாழ்க..கவியே…!
· 3 June – 2017 -at 16:00
Vetha Langathilakam :- நன்றி உறவே
LikeLike
Alvit Vasantharany Vincent :- நல்லதோர் கவிதை.
y · 3 June at 19:20
Alvit Vasantharany Vincent :- ‘தேவதாசிகள்’ என்ற பதமும் அவர்களுடைய ஆடற்கலையும் ஏற்கனவே உள்ள சொற்களே. இதில் தவறேதுமில்லை. இதுவே பின்னர் ‘பரதக்கலையாக’ மாற்றம் கண்டுள்ளது.
3 June at 19:27
Vetha Langathilakam :- ஆம் அதையே கூறினேன். இதன் காரணமாக கவிதை நிராகரிக்கப் பட்டது.
எப்படியெல்லாம் தூக்கி எறிகிறார்கள் சிலர்.
· 3 June at 21:12
Alvit Vasantharany Vincent:- ஓ!
3 June at 21:15
Alvit Vasantharany Vincent :- பரவாயில்லை சகோதரி. நீங்கள் சோராமல் தொடர்ந்து எழுதுங்கள்.
· 3 June at 21:16
LikeLike
ஆகா…! ஆகா…!
LikeLike
அருமை சகோதரியாரே
LikeLike
அருமை
LikeLike
மிக்க நன்றி உறவே dear N. Bharathi தமது கருத்திடலிற்கு.
மகிழ்ந்தேன்.
LikeLike
கிருபானந்த் நாமக்கல் :- பரதத்தின் காதலன் நானும்…அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நீண்ட ஆசை பரதத்தை கவியாக்குவது வார்த்தைகள் இதுவரை வஞ்சனை மட்டுமே செய்கின்றன…
8-6-2017
Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே தமது கருத்திடலிற்கு.
மகிழ்ந்தேன்.
8-7-2017
LikeLike