15வதாக ‘ கவி வித்தகர் ‘பட்டம் இறுதி வரிக்கவிதை வரிகளாக எழுதிவெற்றி பெற்றேன்.
தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.
ஓ!……மிகவும் ஆனந்தம்!…லேசுப்பட்ட வேலையல்ல.!…
பல தடவை முயற்சித்தேன்!.
அதனால் எழுத எழுத என் தமிழ் மெருகேறுவது உண்மை….
இன்னும் முயற்சிப்பேன். ‘ கவி வித்தகர் ‘ நிலாமுற்றப் பட்டம்.
மிகுந்த மகிழ்ச்சி…நடுவர் குழாம், நிலாமுற்றம் குழுவினருக்கு மிக்க நன்றி.
*
*
*
இதன் கவிதை இதோ!..:- கடைசி வரிக் கவிதை
அவள் ஒரு அழகிய கவிதை
*
மஞ்சள் நிலவொன்று மகிழ்ந்து
கொஞ்சும் விழிகளுடன் வீதியிலிறங்கியது
தஞ்சம் கேட்கவில்லை தன்
நெஞ்சத் துணிவுடன் கடமைக்காய்.
*
ஆரவாரமின்றி அடக்கமாய் அடியெடுக்கிறாள்.
ஆரணங்கேயுன் அழகால் அல்லாடும்
அணழகர் எத்தனையோ ஆயிழையே!
ஆராதிக்குமவன் உன்னிதயம் திருடிவிட்டானா!
*
பிரமன் படைப்பிலே பித்தாகிறேன்
பிரமை பிடிக்குதடியுன் விழியழகில்
பிரபஞ்சத்தைப் புரட்டும் காதல்
பிட்சாந்தி நானடி புரிகிறதா!
*
நாணிக்கோணும் பெண்ணல்ல நீ!
நாலும் தெரிந்த பாவனையென்னை
நாட வைக்கிறதுன் அன்பை
நாடகப்பொற்பாவையே என் நறுந்தேனே.
*
வாழ்வின் சந்தம் காதலடி
தாழ்ந்திடாது உய்த்திட உன்னோடு
ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமடி.
வாழ்ந்திடுவோமே ஒரு குடைக்கீழ்
*
இவளொரு ஆசைச் சுரங்கம்!
அறிவுப் பெட்டக அரங்கம்!
அனுபவக் காதலிற்கு விதையாய்
அவள் ஒரு அழகிய கவிதை.
*
(பிட்சாடனம் – இரத்தல், பிச்சையெடுத்தல்)
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 5-7-2017
*
LikeLike
வாழ்த்துகள் அம்மா….
LikeLike
தங்கள் கருத்திற்கு மகிழ்ந்தேன் .
மிக்க நன்றி சகோதரா.DD
LikeLike
வாழ்த்துக்கள் சகோதரியாரே
LikeLike
தங்கள் கருத்திற்கு மகிழ்ந்தேன் .
மிக்க நன்றி சகோதரா.
LikeLike
தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டைGroup admin:- அவள்”ஒரு அறிவுப் பெட்டகம் அருமை
7 July at 11:21
Vetha Langathilakam :- Mikka nanry makilchchy urave.
9 July at 14:32
Vetha Langathilakam:- முத்தமிழ்க்களம்
27 June 2016 •
LikeLike