குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா-
குட்டிப் படம் கடதாசியில் ஒட்டியதா–
பட வரிகள் 42./ 14-12-2015
சுவரில் தெரிவது தன் சொந்தமா என்று அறிந்துகொள்ளத்தான் இந்த முகர்தலா? அல்லது சுவரொட்டியாய் இருந்தால் புசித்துப் பசியாறலாமே எனும் ஆவலால் பிறந்த ஆராய்ச்சியா? என்று ஆட்டை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.
குட்டிப் படம் கடதாசியில்
ஒட்டியதா! அதையாவது பிரித்தால்
பட்டினி பரிதவிப்பிற்கு உண்ணலாமே!
கிட்டச் சென்று ஆராய்ச்சியா!
சிறிதே பொறு பிள்ளாய்!
கடிதே புற்தரைக்குச் செல்லலாம்!
தெரிவதிங்கு நம் சொந்தமா!
உரிமையாய் அறிந்திட முகர்தலா!
வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்.