160. சான்றிதழ்கள் – கவிதைகள்155.


அத்திரம் மையலாக விந்தை கூட்டுதடி
சித்திரக் கவிபாடி முத்திரை பதிக்குதடி
ஒத்திகை போடாமலே உள்ளம் ஒத்திசைக்குதடி
கைத்தலம் பற்றிட மொத்தமாய் ஆசையடி
எத்திசையிலும் உன் உரு ஒயிலாகுதடி
முத்தாரமே என் முழுமதி நீயடி
00

பத்தரை மாற்றுப் பசும் பொன்னே
நித்திரை களவாடிய நித்திலமே நிதியே
தித்தித்தல் உன் நினைவு திரவியமே
முத்தமிழ் மோகனமே சித்தமா ஒரு
முத்தம் பரிமாற சிந்தை மயங்குதடி
பத்திரம் நித்தம் சித்திரம் பேசுதடி.
00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 17-6-2023