*
காலத்திற்கும்… மனது …
*
ஓடிக் கொண்டேயிருக்கும் மன எண்ணம்
பாடிக் கொண்டேயிருக்கும் தினம் தினம்
புல்லாங்குழல் துளைகளால் இசை வழிகிறது.
பல்லாங்குழி ஆடி ஆசுவாசமாகிறது மனது
*
எண்ணத்தில் தெரிவது கடல் தொடுவதாய்
கண்களிற்குத்; தெரியும் வானச் சுவர்.
சுவருமில்லை கடல் தொடுவதுமில்லை. ஓரு
மாயத் தோற்றம் கானல் சுவரேதான்.
*
தேவர்களல்ல அவர்கள் வெறும் மானிடரே
தேவதருவல்ல மனம் உன் உதிரமுமே
எல்லாப் பூக்களும் மணப்பதில்லை நெஞ்சில்
நில்லா மணங்கள் எனவும் இல்லை.
*
ஈனச் சுவர் ஊனச் சுவரிடியும்
சீனச் சுவர் மானச் சுவரிடியாது
கான அலை காதில் கேட்டபடியே
காலத்திற்கும் நெஞ்சில் பாட்டு ஓடும்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 11-8-2016
*