1 year ago
September 29, 2018 at 12:13 PM ·
போதநாயகிக்கு அஞ்சலி’, ‘மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப்பணி’, ‘பண்பாட்டுப் பேணுகை’ ஆகியவற்றோடு ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இரு நூல்கள் வெளியீட்டு விழா.
டென்மார்க் வாழ் ஈழத்துப் படைப்பாளி வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதிய ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு கண்டன. வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான இவ்விரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் வன்னியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
.
இந் நிகழ்விற்கு எமது அறிவிருட்ஷம் ஏற்பாட்டில் பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி உத்தரவாதக் கல்வி மாணவிகள் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து புத்தளம் அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு சார்பில் பன்னூலாசிரியர் முல்லை றிஸானா அவர்களினால் நூலாசிரியருக்கான கெளரவிப்பு அளிக்கப்பட்டது
I M சுறைஸ்
பணிப்பாளர்
அறிவிருட்ஷம்
துருத கல்வி சமூக மேம்பாடு