திருமதி சசிதேவிக்கு வாழ்த்துகள் (நான் எழுதிய வாழ்த்துரை)
டென்மார்க்கில் தமிழர்கள் எண்பதுகளில் தொண்ணூறுகளிவ் வந்து சேர்ந்தனர். மொழி, கலாச்சாரம், காலநிலை நம்மைப் புரட்டிப் போடும் விதத்தில் எதிர்மாறாக இருந்தது. அடுக்கடுக்கான ஆடைகளால் குளிரையும், கடும் முயற்சியால் மொழியையும் பழக்கப் படுத்தினார்கள். கலாச்சாரம் இடிபாடாகவே இருந்தது. பிள்ளைகள் வளர்ப்பில் சவாலாகவே இருந்தது. கலைவழியான நடனம், இசை வகுப்புகளுக்கு அவர்களை அனுப்புவதன் மூலம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுக்கப் பட்டது. இறைவணக்கம், ஆசிரியரைக் கனம் பண்ணல், மொழிப் பரிமாற்றம் என்று அனைத்தும் உயிர்ப்பிக்கப் பட்டது. திக்குத் தெரியாத காட்டில் இது ஒரு தெய்வச் செயலாக இருந்தது. நடன ஆசிரியராக சசிதேவியும் தான் தாய்நாட்டிலிருந்து கொண்டு வந்த கலையை அஞ்சலோட்டமாக டென்மார்கில் எடுத்துச் சென்றுள்ளார். கணேஷா நாட்டியக் ஷேத்திரம் மூலம் இதை வளர்கிறார்.மாபெரும் சேவை இது. தனது எழுத்துமூலம் செயற்பாடுகளை நூலுருவில் மக்களிடம் சமர்பிக்கிறார் அனைவரும் இதைப் பெற்றுப் பயனடையவேண்டும். இவரது முயற்சிகள் மேலும் பெருகி உலகிற்கு நற்சேவையாக உயர வாழ்த்துகிறேன். இவ்வாழ்த்தைத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் வாழ்க! வளர்க!
ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை (பெட்டகோ)
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
ஐப்பசி 2020