novenber 26-2017
சங்கேமுழங்கு பாரதிதாசன் கவிதைகள்-20
Zegu Zeguசங்கத்தமிழ் சான்றிதழ் பதிவு குழுமம்
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
28/02/2017 நாள் நடந்து முடிந்த புதியதோர் உலகு செய்வோம் எனும் தலைப்பில் பாரதிதாசன் போட்டியில்
கவிதை எழுதிய
கவிஞர் [ இலங்கா திலகம் வேதா]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த நடுவர் கவிஞர் கோவிந்தராஜன்பாலு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் *********************************
*
புதியதோர் உலகு செய்வோம்.
*
புதியதோர் உலகு செய்வோம்
விதியதை மாற்றி நெய்வோம்.
இதிகாசங்கள் காலத்திற்கும் பேச
மதியதின் செயற்பாட்டை முடுக்குவோம்.
பஞ்ச மகா பாதகங்கள்
நஞ்சுடைய செயலெனப் பாலகருக்கு
பிஞ்சு வயதிலேயே புகட்டுவோம்.
நெஞ்சிலே நன்னெறிகள் ஊட்டுவோம்.
மரங்கள் நட்டு பாதுகாத்து,
வரமெனும் மழை பெற்று
தரமுடை மண் வளத்தைக்
கரம் குவித்துப் பெறுவோம்.
மூடநம்பிக்கைகள் கேடுகள் அழித்து
ஆடவரோடு பெண்டிர் கல்வியையும்
தேடிடக் கை கொடுப்போம்.
கூடிடுவோம் நீதியே கொடியாக.
ஓற்றுமையாம் கூட்டுறவு பெருக்கி
கற்றவரான உலகு அமைப்போம்.
அற்புதச் சுகாதாரம் உயர்த்துவோம்.
சுற்றம் பேணிச் சுகமாவோம்.
அன்பே தாரக மந்திரமாகி
வன்முறை அற்ற உலகை
தென்புடன் இணைந்து உருவாக்குவோம்.
இன்பமான புத்துலகு அமைப்போம்.
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.