வயலோசை
(சதம் – அழியாதது. சந்ததம் – எப்போதும்)
‘ உய் ‘ யெனக் காற்று தன் விசையிலுரசி
ஊரையும் கடந்திடும் பச்சை வயலோசை
உயர்ந்த கிளைகள் தடையில்லை நெற்பயிர்கள்
உவப்பாய் ஒயிலாய் வான் நோக்கும்
மழை வெள்ளம் கூட்டுத் தவளைகளோசை
மாய்ந்து மாய்ந்த சத்தம்! இரவினிலே
மரணிக்கும் தன் வயிறு வெடித்திடவே
மொய்க்கும் காக்காய்களின் காலை இரையாகும்.
வாய்க்கால் நீர் தாள இலயமாய்ப்
பாய்ந்திடும் சலசல வோசையோரினிமை
காய்ந்த நெல்மணிகள் கலகலவெனக் குலுங்கும்
சாய்ந்து குருவிகள் கீச்கீச்செனக் கொத்துமோசை.
உழுகின்ற வேளையில் வயலில் பறவைகள்
எழுச்சி கீதமோடு புழுஇ பூச்சிக்காய்
உழவனைத் துரத்தி மாட்டுச் சலங்கைக்குப் பயந்து
உழவன் தலைப்பாகையிலும் அமர்ந்து பறக்குமோசை
விதமாகக் குச்சியோடு குழந்தைகள் குருவியோட்டல்
பதமாக நாற்றுநடுகை அருவி வெட்டில்
சந்ததம் வளையலோசை பெண்களாலினிமை
சதமும் வயலோசை ஆரோக்கிய இன்பம்.
‘ விர் ‘ ரென்று வந்திறங்கும் பாலவண்ணக் கொக்குகள்
‘ சர் ‘ ரென்று அணிவகுக்கும் சீர் ஓசை
‘ உர் ‘ ரென்ற முகத்தையும் மலர வைக்கும்.
அர்ச்சனை இயற்கை அமைதியோசை வயலோசை
2-3-2018