எனது 4வது – 5வது நூல்களின் விளம்பரம்.
*
*
யோ புரட்சி is with Vetha Langathilakam.
டென்மார்க் வாழ் பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகம் எழுதி, வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான, ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இருநூல்களின் வெளியீட்டு விழாவானது மாற்றுத் திறனாளிச் சிறுவர் இல்லமான வன்னியின் இனிய வாழ்வு இல்லத்தில் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெறும்.
அன்பான ஒரு வாழ்த்து
கலந்தர் பூமதீன்
வன்னித் தமிழ்
தாய் நிலத்தில்
வரமாய்க் கிடைத்த
வெற்றித் திலகம்
கவிப்பாரதியின்
மறு உருவம்!
முல்லைமடி தவழ்ந்து
தமிழ்ச் சொல்லால்
உலகையே கவர்ந்த
கவிக்கோர் கலசம்
வேதா இலங்கா திலகம்!
பிற மொழி தேசமதில்
வாசம் கொண்டாலும்
முத்தமிழ் மொழியை
சுவாசமாய்க் கொண்டு
கொட்டுவதெல்லாம்
வேதா இலக்கியம்!
மரபு,ஹைக்கூ
புதுக்கவிதை என
புதுபுதுக் கோணத்தில்
புதுமை படைக்கும்
வேதாவின் புலமை!
உயிர் வாழும் வரை
வேதாவின் பேனா
தமிழ் பாடும்
வருங்காலம் வேதாவை
தமிழ் உலகமே
கொண்டாடும்!!
தரணியெங்கும்
தமிழ் வாழும்
தமிழ் உள்ள வரை
தங்கள் புகழ் வாழும்
வாழ்த்துக்கள் மேடம்!!!
****
**********************
நற்குறள் தாழிசை
நன்தமிழ் நூலுடன்
பெற்றோ. ரியலில்ஒண்
சிற்றலைகள் — இற்றரை
ஏரிரு நூலீய்
இலங்கை திலகமே…!
சீர்புகழ் ஓங்கும்
செகம்.
கவிக்கோலம்
கிருஷ்ணமூர்த்தி.
வேதா இலங்கை
திலகா
எனது நூல்கள் என்ற இணைப்பில். முதல் 3 நூல்கள் பற்றி இங்கு காணலாம்.