*
காந்தி மறைவு தினம்
*
காந்தி மறைவு தினம்
*
கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்
கனகசபை முதலியார் இலக்குமி அம்மாள்
கனக பொக்கிசப் புதல்வர் சுப்புரத்தினம்.
கவிஞன் உதயம் சித்திரை 29 – 1891.
*
உவமைகளில் மன்னர் இசையோடு பாடுவார்.
உகந்த நாடக நடிகர். இந்தியாவில்
தமிழ் பாட்டெழுதிய முதற் பாவலன்.
தமிழிதழ்களின் ஆசிரியர் . பிரெஞ்சும் கற்றிருந்தார்.
*
கிண்டற்காரன், கண்டெழுதுபவன், கிறுக்கன், இவர்
கொண் டெழுதிய சில புனைபெயர்கள்.
தமிழ் தேர் சுற்றிய பக்தன்
கமழ் பகுத்தறிவு சுயமரியாதை பெண்ணுரிமையாளன்.
*
திரைப்படக் கதை வசனகர்த்தா சுயதிறனால்.
சிறையேகினார் போராட்டங்களில் அதிக நாட்டம்.
முறையான புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் (1954ல்.)
கறையற்ற ஐந்தாண்டு அரசியற் செயலாக்கம்.
*
புதுச்சேரியில் புடமிட்ட தமிழ் தங்கம்.
மகாகவி பாரதி சந்திப்பால் பாரதிதாசனாகியெழுதினார்.
பழனியம்மாள் நல் இல்லறத் துணைவி.
தங்கக்கிளி (1946) சாகித்தியஅகதாமி (1970) தபால் தலை (2001)
கௌரவங்கள். பாரதிதாசன் வாழியவே!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 27-4-2017
*
பொழுது விடியுமா.
*
கழுகு போல் காத்திருக்கிறேன் நல்ல
பொழுது விடியும் என்ற நம்பிக்கையில்
பழுதில்லா என் எண்ணத்தை இறைவன்
கழுவிட மாட்டான் அசையாத உறுதி.
அழுதிடவுமில்லை அக்கறையான பக்தியும் உண்டு.
*
மெழுகாய் உருகும் காலம் இது.
பொழுது விடியுமாவென்ற கேள்வியே இல்லை.
எழுந்திடு! பொழுது விடியட்டும் காலைச்
சேவல் கூவட்டும்! புள்ளினங்கள் ஒலிக்கட்டும்!
அழுதிடட்டும் உன் குழந்தை பாலுக்காக.
*
வெற்றி நடை போட வேண்டும்!
பற்றிடு பல சாதனை நேரத்தை!
கற்ற திறமைகள் உலகிற்காய் ஒளிரட்டும்!
முற்றி முதிர்ந்திட முன்னர் முழுவதுமாய்
முயற்சித்து விடு பொழுது விடியும்!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-4-2017
*
*
இந்து மாவாரியின் நித்திலமாம் இலங்கையில்
செந்தமிழ் மணம் வீசும் கட்டப்பிராய்
திரு. திருமதி மகேஸ்வரன் புதல்வன் நிமலன்
நீர்வளமிகு வாழைக்கனி மனதிலினிக்கும் நீர்வேலி
மண்ணின் திரு. திருமதி சிவனேஸ்வரன் புதல்வி
குகப்பிரியாவுடன் உணர்வை மதித்தொரு மனதாகி
ஊரிமைகள் பகிர்ந்து நல்லறம் காணும்
மங்கலத் தாலி அணிவிக்கும் திருநாள்.
திருவருள், குருவருள், மக்கள் வாழ்த்துகள்
அருமையாய் நிறைய கையோடு கையிணைத்து
காலமெல்லாம் ஆனந்தித்து செம்மையாய் வாழ்க!
அன்பும் அறமும் நிறைந்து பண்பாகவொரு
இன்பக் காவியம் இணைந்து படையுங்கள்!
பிறன் பழிப்பதில்லா இல்லறம் காணுங்கள்!
நாளும் வாழ்வே விழாவாக நேசியுங்கள்!
உதாரண தம்பதிகளாகிட மலர்கள் தூவுகிறோம்!
23-11-2017 திருமண நாளில் இணைபிரியா
இல்லறம் காணுங்கள்! பதினாறு செல்வங்கள்
குறைவின்றிப் பெற்று வாழையாய் வம்சம்
தழைக்க, உறவினர் வியக்க வாழ்க!
தொப்புள்கொடி உறவாய் டென்மார்க்கிலிருந்து அன்புடன்
மனமார வாழ்த்துவது அத்தை திருமதி
சன்முகநாதன் சிவனேஸ்வரி குடும்பத்தினர்.
கார்த்திகை – 2017.
( என்னால் எழுதப்பட்டது
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்)
*
*
இந்த சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் பாருங்கள்.
உலகம் உன் கையில்.
*
(தலகம் -தடாகம். திலகன் – சிறந்தவன். நறுமை – நன்மை)
கலகம் நிறை உலகிது அறிந்திடு.
விலக முடியாது வல்லாண்மையால் வென்றிடு.
தலகத்தில் சிறப்பு மலரான தாமரையாகு
உலகம் உன் கையில் தானேயென்று.
திலகம் பெறு சமூகத்தில் திலகனென்று.
நதியோடும் போக்காக நம் பாதையை
குதித்தோடி நாமே நம் வழியை
மதியாகக் கடத்தல் திறமை. விதியை
அதி புத்தியால் வெல்வது நதியை
அணை போடுதல் போன்ற சவால்.
வறுமையை ஓட்டு, மரங்களைக் காப்பாற்று
சிறுமையான விவசாயி நிலையை ஏற்று
வெறுமையை வெறுத்து உன்னை அறி.
நறுமை பொறுமையால் செங்கம்பளம் விரியும்.
மறுமையிலல்ல இப்பொழுதே உலகமுன் கையில்.
காத்திருக்காதே கணனியைத் தட்டு! முன்னால்
நேத்திரத்திலும் உலகம் உன் கையில்.
ஆத்திரமழித்து உண்மையாய் தர்மமாய் செல்!
சாத்திரம் கைவிட்டு சித்த உறுதியால்
நம்பிக்கையோடேகு உலகம் உன் கையில்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-3.2017
*
*
*
திண்ணம்! கூட்டு வாழ்க்கையே இல்லறம்
பெண்ணைத் துணையாகக் கொண்டு ஒருவன்
வண்ண மனையறம் அமைக்க, வீரமானவன்
எண்ணி வரதட்சிணை வாங்குவது வீண்.!
*
வரன் தட்சிணை என்றால் நன்
வது தட்சிணை வழக்கில்லையே ஏன்!
முரண் இங்கேயே தெரிவது தெளிவு
முகமூடியிட்ட பணத் திருட்டு அழிவு
*
பெண்ணால் ஆணும், ஆணால் பெண்ணும்
நண்ணும் இன்பம் விலையற்றது. இன்னும்
வண்ணமாய் வளர்க்கும் குழந்தைச் செல்வமும்
கண்ணெனப் போற்றும் குடும்பவுயர்வும் ஈடற்றது.
*
ஒரு குலம் பிறந்து பெண்ணாள்
இரு குலம் உயர்த்தும் பண்புடையாள்.
பெரும் தட்சிணை பெண்ணுக்குக் கொடுங்கள்!
கருமை முதிர்கன்னி நிலையை அழியுங்கள்!
*
ஆண் பேடியாகிறான். உழைப்பு, முயற்சி,
கண்ணியம், வரதட்சிணைப் பேயால் தாழ்ச்சி.
பெண் வழியில் பெருமைப் பாதையில்
வீண் அவமானம், விரக்தி தற்கொலைகள்.
*
வரமாம் வாழ்விற்கு இழவு வரதட்சிணை.
தரமாம் காதலே உயர் தட்சிணை.
உரமான அன்பே பெரும் துணை.
சிரமேற்கொண்டு கள்ளிப் பாலைத் தொலை!
*
வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் 24-5-2016
*
சான்றிதழ் கவிதையை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
*
https://kovaikkavi.wordpress.com/2016/03/03/60-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/
*
*
1.
ஆய்வால் தேடும் விளக்கங்கள், பயன்கள்
அறிவு வளர்ச்சியின் உயர்ச்சிப் பயன்பாடு.
ஆழ்ந்த தேடலாய்வு உலகெங்கும் உயர்வு.
ஆய்வாளர் மூளை ஓய்ந்திடாது கருமமாற்றும்.
2.
ஆய்வு வானிலை, கலைத் தேடல்
கலாச்சாரம் கடலாய்வென பல விதங்கள்.
உயர் பரிசுகள் ஆய்வினால் பெறுகின்றனர்.
நாட்டின் முன்னேற்றம் இதனால் உயரும்.
(வேறு)
ஆய்வின் நோக்கம் மூளை வளர்ச்சி.
ஆழ்ந்த வாசிப்பு, பிறரைப் பேட்டியெடுத்தல்
ஆழ்ந்து விடயங்களில் ஊன்றும் கவனிப்பு
அறிவின்மை இருட்டைப் போக்கும் ஒளி.
*
மனித நாகரீக வளர்ச்சி பண்பாடு
புனித அறிவின் வளர்ச்சிக் கோடு.
வனிதமான ஆய்வு புத்தறிவுத் திரட்டு
தனித்துவ தேடல் வேட்கை வெற்றிக்கோடு
*
அறிந்ததை மேலும் ஊன்றித் தேடலால்
அறியாதவை புதையலாக வெளி வருதல்
ஆய்வு என உரு மாறுகிறது.
அறிவின் தேடல் அறியாமையினழிவு ஆய்வு
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 27-12.2017
*
*
வாழ்க்கை வரமா பாரமா – இதன் கவிதை இந்த இணைப்பில் உள்ளது.
அழுத்தி வாசியுங்கள் .
மிக்க நன்றி.
*
*
*
ஏனிந்த விடப்பரீட்சை! – இதன் கவிதை இந்த இணைப்பில் உள்ளது.
அழுத்தி வாசியுங்கள் .
மிக்க நன்றி.
*
இதன் கவிதை இந்த இணைப்பில் உள்ளது. அழுத்தி வாசியுங்கள் .
மிக்க நன்றி.
*
*
மானின் விழியாலுட்புகுந்து பேசும்
தேனின் சுவை சொட்டும் இன்பம்
எனில் உன் காதலிதயம் என்னிடம்.
இனியதைத் திருடாதேயென் சொத்து அது!
இணைந்துலகை வென்று இன்பத்தில் திளைப்போம்.!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 9-1-2018
35.
*
வீழ்ந்திடாது உயரும்
தாழ்ந்திடாது தன்னையெரிக்கும்
வாழ்வினொரு பாகம்!
தாகம் தியாகம்!
பெற்றவர் யாகமும்
பெருந்தியாகமான யோகமே!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-12-2017
36.
தொடர்புறவாடல்
இடர் களையும்!
அடர் (நெருக்கமான) நட்பிற்கும்
சுடரேற்றும்.
*
37.
அப்பப்பா புலமைத்துவம்
ஒப்பில்லாத் திறமைத்துவம்!
உப்பிட்ட உணவப்பா!
தப்பாக உப்பிட்டால்
துப்புக்கேடு ஆகாதோ!
தப்படி ஆகாதோ!
(துப்புக்கேடு – சீர்கேடு. தப்படி – தவறான செயல்)
*