ஆசையா! கோபமா!
ஆசையா கோபமா நேசக் கண்மணி!
ஆசையுடன் தலைகோதல் இதமாக இல்லையா!
உன்னாசையைப் பூட்டி வைத்து மௌனமா!
என்னாசை நாயகி நீதானே அறிவாயே!
காதல் கிழத்தியே கோபம் விடு!
மோதல் வேண்டாம் தணிந்து விடு.
ஈதல் எடுத்தல் தானே காதல்
ஓதல் தேவையில்லை இணங்கி வா!
கண்ணுக்குள் கண்ணாய் என்னுக்குள் நீயானோம்.
எண்ணம் முழுதும் வேறு அல்ல.
வண்ண நிலாவாய், பூரண மதியாய்
விண்ணை முட்டும் அளவு நீயே!
கண்ணே சிரித்திடு! அனல் சூறாவளி
வெண்ணெயாய் உருகட்டும்! வெறுப்பு, தகிப்பு
மண் கவ்வட்டும்! உன்னோடு பேசாது
பண்ணும் இசை சேராது தனியாகிறது.
பால் கசந்திடுது படுக்கை நோகிறது.
நூலாய் நான் இளைக்க முன்னர்
வேல் எனும் மன்மதக் கணையையென்
மேல் எறிந்து குளிர்மை தா!
8-6-2017