158. சான்றிதழ்கள் – கவிதைகள் 153யாதுமாகியவளே!.

சந்திரோதயம் கவிவனம் 21-3-2023 மிக்க நன்றி
00


யாதுமாகியவளே!..
00


ஏதுமாகி எடுத்தெறியாது நாதமாகி நல்ல
சூதுவாதற்ற அன்பால் கோதி இல்ல
பாதுகாப்பை உயிராகப் பேதமை இன்றி
மாதுரியமாக மதிப்பவள் பெண்மையின் குன்று!
00
அன்னை மனைவி மகள் மருமகள்
அன்வயத்தாரையும் அணைப்பாள் அன்ன பூரணி
அன்புடன் போற்றுங்கள் இன்னலின்றி வாழ்வீர்கள்
உதிரம் பாலாக்கி கருவேந்தும் யாதுமாகியவளே!
00
(அன்வயத்தார் – சுற்றத்தினர் )

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -21-3-2023

9. நான் பெற்ற பட்டங்கள்

அவ்வையார் விருது.

அருந்தமிழ்க் கவிக்கூடம் – சமூகக் கவிதை தலைப்பு.
அவ்வையார் விருது.
குழுவினருக்கு மிக்க நன்றி.
00


பெண்ணறிவு நுண்ணறிவு
00

பெண்ணறிவு பெருகுதல் பெருமிதம் பெருந்தகவு.
பெண்ணொருத்தி அறிவால் பெருஞ்சமூகம் உயரும்.
நுண்ணறிவு கூரறிவு வேலைத்திறன் நிறைந்த
பெண்மையின் கண் நிறைவுப் பண்பிலே
தண்மதியாம் தவழ்புனல் வெண்ணுரை அன்பிலே
எண்ணற்ற புதுமைகள் வண்ணமாய் எழுந்துள்ளன.


00
இத்தாலி விளக்கு ஏந்திய சீமாட்டி
இன்கவி பாரதிக்கு ஒரு நிவேதிதா
அதியமான் நெடுமான் அஞ்சிக்கு ஒளவை
விவேகானந்தருக்கு சாரதாதேவியார் விந்தைப் பெண்பாலர்.
தன்னைத் தானே வலுப்படுத்தி வாழ்பவள்.
மானுட நதிப்பெருக்கின் ஆரம்பமும் இவளுடனே!
00

7-3-2023


பெண்ணறிவு பெருகுதல் பெருமிதம் பெருந்தகவு.
பெண்ணொருத்தி அறிவால் பெருஞ்சமூகம் உயரும்.
நுண்ணறிவு கூரறிவு வேலைத்திறன் நிறைந்த
பெண்மையின் கண் நிறைவுப் பண்பிலே
தண்மதியாம் தவழ்புனல் வெண்ணுரை அன்பிலே
எண்ணற்ற புதுமைகள் வண்ணமாய் எழுந்துள்ளன.
00

இத்தாலி விளக்கு ஏந்திய சீமாட்டி
இன்கவி பாரதிக்கு ஒரு நிவேதிதா
அதியமான் நெடுமான் அஞ்சிக்கு ஒளவை




விவேகானந்தருக்கு சாரதாதேவியார் விந்தைப் பெண்பாலர்.
தன்னைத் தானே வலுப்படுத்தி வாழ்பவள்.
மானுட நதிப்பெருக்கின் ஆரம்பமும் இவளுடனே!
00


8. நான் பெற்ற பட்டங்கள்

கவிஞர் நா. முத்துக்குமார் விருது

அன்புடன் நன்றிகள்
அருந்தமிழ் கவிக்கூடம் -கவிதை…தலைப்பு
00


ஆனந்த யாழை மீட்டுகிறாய்!
00


ஆனந்த யாழை மீட்டுகியாய் தென்பாய்
நானந்த இனிமையில் மயங்குகிறேன் அன்பே
ஓ! நந்தலாலா! இன்பக் குழலிசையோடு
நாமிந்த இரசனையை இணைத்திட முனைவோமா!
தேனந்தக் காதலும் தேங்காது இணையட்டுமே!
வானகம் வரை வளர்த்து ஆனந்திப்போமே!
00
கள்ளுறும் மலராகத் துள்ளுது இரகசியமாய்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது வா!
வள்ளுவன் மொழிந்த மூன்றாம் பாலும்
உள்ளம் உவந்து உணர்த்துவதும் இதுவே!
வள்ளத்தில் உன் மடியில் நான்
வானிலா பார்க்கிறேன் உன் முகமாய்!
00
22-2-2023