10-6-2017.
கனா கண்டேனடி
கனா கண்டேனடி கவிதையில் வென்றேனடி
வினா ஏதுக்கடியினி விசும்பாதேயென்னைப் பார்!
கனா காணடி! தாலி தயாரடி
பொன்னுருக்கி வார்த்த வானம் பார்!
கண்மணியே என்னை மணப்பாயா சொல்!
5-11-2019
கரையின்றி எழுதுவோம் பல கவிதைகள்
கங்கையாய் ஓடட்டும், இலக்கியத் தமிழ்க்
கடலில் சேரட்டும் கலைவாணி அருளுடன்.
திடலில் வானம் தொடும் தூரமாகும்
கடலைத் தாண்டுதல் கடும் பிரயத்தனமே.
கோட்டை கொத்தளம், குடிசையிலும் எம்
பாட்டைப் பலரும் பேச வேண்டும்.
ஊட்டமிகு கருத்துடனே இறப்பில்லா வரிகளாய்
கூட்டி எழுத வேண்டும் நாம்
கேட்டாயா கண்மணியே என் ஆசைகளை
வேறு
ஆண்:- கண்களால் இசை மீட்டி
எண்களாய் நாட்கள் ஓட்டி
விண்ணிலே பறக்கும் கற்பனைகள்
எண்ணிலதாய் நான் காத்திருக்கிறேன்.;
ஆகா எந்தன் ராணி
போகா வனமே போவோம்
சாகாக் காதல் கொண்டு
சாம்ராச்சியம் ஒன்றமைப்போம்.
பெண் வாராய் கண்ணா வாராய்
தாராய் உந்தன் கரங்கள்.
நீராய் நெளிந்து ஓடி
நிலவுலகம் இணைந்து அளப்போம்
உலகோர் காணா விதத்தில்
உள்ள தேனை அருந்தி
ஆழக் காதலில் நீந்தி
ஆனந்தம் காண்பொம் நாமே
மாலைகள் மாற்றி இணைவோம்
சோலைகள் யாவும் அணைவோம்
பூவுலக சொர்க்கம் காண்போம்
பூரித்து நன்றி சொல்வோம்.
2016