12. பேட்டி – நேர்முகம் – விழா

11. பேட்டி – நேர்முகம் – விழா

2022 வாழ்க தமிழ் – கலை மாலை விழாவில் எனது சிறு உரையும் கவிதையும்

சுந்தரக் கனக நிலா!

அது என்ன ?.சுந்தரக் கனக நிலா! …சு.ந்தரம் – அழகு. கனகம் பொன்
அழகிய தங்க நிலா இப்படி – தமிழ் சொல்லை –வார்த்தையைக் குறிப்பிடுகிறேன்.
அன்பே அமுதே அருங்கனியே ஆனந்தத்தேனே என்ற இவைகளைக் கேட்கும் போது இனிமையாக உள்ளதல்லவா!
கொஞ்சுமொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி !
இதுவும் இனிமையல்லவா! இதனால் தான் சுந்தரக்; கனக நிலா என்று தமிழ் சொற்களைக் கூறுகிறேன். இதற்குப் பின்னாலே வருகிறேன். இப்போது தமிழ் சொற் பிறப்பு என்பது பற்றிப் பார்ப்போம்.

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும்இ தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிளஇ தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள்இ மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாகஇ ‘தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி ‘தனது மொழி’ என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது ‘தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி’ என்ற பொருள் தரவல்லது என்கிறார். ——தகவல்ஃஃஃஇணையம் —–

சுந்தரக் கனகநிலா – (தமிழ் வார்த்தைகள்.)

தொடர்பு இணைப்பை மனிதருள்
படர வைக்கும் வளையம்.
இடர்கள் தீர்த்து இன்பம்
படர்த்தும் வார்த்தைகள் பூக்கள்.
ஓர் எழுத்தாயும் இணை
சேர்த்துக் குழு நிலையாலும்
வார்த்தைகளில் அர்த்தம் உயிர்க்கும்.
வார்த்தைகள் கடல் – மகா கடல்.

நேர்த்தியான வார்த்தைகள் கூட்டுச்
சேர்த்தால் இன்ப மொழிச்
சொர்க்கம் அருகிலே – இங்கேயே.
உதடுகள் பேசும் வார்த்தைகளை
உயிரான கண்களும் பேசும்.
தீர்க்கமான ஆசையில் பாசமாய்
போர்த்திய நேசக் கனகநிலா
வார்த்தைகள் உயிரை ஈர்க்கும்.

சிந்தனை வெள்ளத்தால் படியும்
சுந்தர வண்டல்கள் வார்த்தைகள்.
மந்திரமாய் சீவராசிகளை வசமாக்கும்.
தந்திரமாக பந்தென பொய்களும்
யந்திர வார்த்தைகளும் உருளும்.
தூசி பாசியுடை வார்த்தைகளால்
ஊசியாய்ச் சொருகும் வார்த்தைகளால்
கூசி ஒதுங்குவோர் நல்லோர்.

உணர்வுகளின் தாலாட்டில் அசைந்து
உதிக்கும் முத்துகள் வார்த்தைகளானால்
பேசிடும் வார்த்தையின் ஒலியும்
உயிரை வருடும் இனிமையினால்.
வார்த்தை ஒலி இனிமையில்
கீர்த்தியும் நெருங்கும் அருகில்.
வார்த்தைகள் வனப்புக் குடையாக
நேர்த்தியான பிரசவமொரு இன்பத்தொல்லை.

2009

10. பேட்டி – நேர்முகம் – விழா

இன்றைய விழாவில எனது வரிகள் — திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு 21-5-2022

திருக்குறளின் சில சிறப்புகள்


பதினெண்கீழ்க்கணக்கு சங்கஇலக்கிய நூற்றிரட்டின்
ஆதித் தமிழ் மொழி இலக்கியம்!
அதியற்புத வாழ்வியற் பொய்யாமொழி! – நல்
விதி! நம் புலம்பெயர் வாழ்வுமொழி டெனிசிலின்று
பிரசவமாகிறது – திருவாம் மரியாதை மேன்மையுடைய திருக்குறள்.
00
ஈரடிநூல் – அறம் பொருள் இன்பமுடைய
முப்பால் – உலகப்பொதுமறையான அறநூல்
அப்பொழுதே முதலில் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு
1730ல் வீரமாமுனிவரென்ற கொன்ஸ்தான்ஷியஸ்
யோசப் பெஸ்கியால் இலத்தீன் மொழியில் பிறந்தது.
00
திருக்குறள் – ” வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட
தங்கக் கனியாம் ” மொழிகிறார் கார்ல் கிரவுள்.
அணுவைத் துளைத்தேள் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள் ஒளவை போற்றினார்.
தமிழ் – கடவுள் – என்ற சொற்கள் இல்லாத குறள்.
00
இருநூற்று நாற்பத்தேழு தமிழ் சொற்களில்
இருநூற்றுப் பத்து சொற்களாலமைந்த குறள்
1812ல் முதன் முதலில் அச்சிடப்பட்டது.
14000 சொற்களாலமைந்தது திருக்குறள்.
130 மொழிகளில் வெளியாகி யுள்ளதாம்
00
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை!
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.!
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!
குறள் வெண்பாவெனும் பாவகையால் ஆனது.
கிறிஸ்துவிற்கு முன் மூன்றாமாண்டும் ஓராமாண்டிற்கும்
இடைக்காலத்தில் இயற்றப்பட்டதாக ஆய்வாளர் கூற்று.
00
மதங்கள் – இறைவனின் – பெயரில்லாத குறள்.
திருக்குறளை அரங்கேற்ற எங்களைப் போன்று
திருவள்ளுவரும் சிரமப்பட – ஒளவைத் தமிழ்மூதாட்டி
துணையாகி – தமிழ் சங்கத்தில் அரங்கேறியது.
வான்மறை உலகப்பொதுமறையென 12 பெயர்கள் தாங்கியது திருக்குறள்.
00
தமிழ்க் கலாச்சாரத்தை வரையறைசெய்த நூல்
தனிநபர் அடிப்படைப் பண்பு – அறநெறி –
அகிம்சையின் மையமாக உருவானது.
கிறிஸ்தவ மதஏடு பைபிள் போல எம்தமிழ் கையேடு திருக்குறள்.
டேனிஸ் மக்களும் இதன் புனிதம் அறிவது மகிழ்ச்சியே.

இதன் இயக்கத்திற்குத் துணையான அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்க தமிழ்!!!!

8. பேட்டி – நேர்முகம் – விழா

London Tamil Radio16-12-2021“முற்றத்து மலர்கள்” By சாந்தினி துரைஅரங்கன் : விருந்தினர்: Vetha Langathilakamபாமுக Zoom Live மிக மகிழ்வான அனுபவமாக இருந்தது.சந்தர்ப்பத்திற்கு நன்றியும் நிறைவும்

https://youtu.be/5pUCoEBKopg

6. பேட்டி – நேர்முகம் – விழா

டென்மார்க் வாழ் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய வெள்ளிவிழா கலை மாலையும் முத்தமிழ் அரங்கும் நிகழ்ச்சி கடந்த 22.09.2012 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் வெற்றிகரமாக நடந்தேறியது.

டென்மார்க் மண்ணில் நின்று 25 வருடங்கள் கலைத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு. வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனி மத்தீசன் …பரிசளித்தார்….

http://www.alaikal.com/news/?p=113106#more-113106

முதலாக 35 கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  அதில் நானும் ஒருவளாக…

கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு புகைப்படங்கள். http://www.alaikal.com/news/?p=113783#more-113783

வெள்ளிவிழாக் கலைமாலையிரவில் என்னால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை.

கம்பன் ஒரு இலக்கியப் பந்தல் போட்டதை எங்கோ வாசித்த நினைவு அது இப்படிப் போகிறது:-…

”…சோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு வீதியுண்டாச்சுதடி
   வீதி நடுவொரு மேடையிருந்ததடி, மேடையிலேறினேனடி
   மேடையங்கொரு….” 

என்று இப்படியே தொடர்கிறது.

அப்படியொரு இலக்கியப் பந்தல் ஒன்று நான் போட்டு, அதில் நின்று சிறு கவிதை ஒன்று தருகிறேன்.

”…டென்மார்க் நாடொன்று கண்டோமதிலொரு வாழ்க்கையுண்டாச்சுதடி!
   மொழியைப் படித்த வீதியிலொரு கூடம் தெரிந்ததடி!
   கூடத்தினுள்ளே கூடிப் படித்து மேடையிலேறினேனடி!
     ” பெட்டகோ” (pædagog) மேடையிலேறினேனடி
   வாழும் நாட்டில் இழந்த மேடையை  இங்கு பெற்றேனடி….”

இனி.

வெள்ளி விழா…ஓகோ வெள்ளிவிழா!

உள்ளிப் பூடாய் நாளும்
அள்ளித் தமிழை (தமிழரை) அணைப்போரும்,
தள்ளி – தனியே வாழ்வோரும்
பள்ளி கொண்டே தமிழோடு
புள்ளி சேர்த்து உயர்வோருமாக
கொள்ளை விதமான தமிழருக்கின்று
வெள்ளிவிழா ஓகோ! வெள்ளி விழா!

அறிவைத் தேடி ஓடினால்
குறைவா யெண்ணு முலகில்
முறையாய் நூல்கள் செய்தால்
நிறைவாய் ஆதரிக்கா உலகில்
நிறைவாய் மனம் சோர்ந்;தே
திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.
வேதாவின் வலையென்று கூகிளில்
தேடுங்கள்! கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் என்று தேடுங்கள்.

சமுதாயப் பள்ளங்களை யாராலும்
முழுதாக நிரவ முடியாது.
மனித சரித்திரம் சாதனையுடையதானால்
வனிதமது ஆவணப் படுத்துதல்.
கணிதமான இவ் விழாவும்
ஆவணமாகட்டும் சாதனையில்.
வாரிசுகளிதை அறியட்டும்.
பூரிக்கட்டும் முன்னவரெம் நகர்வால்.

ஒழுங்குகள் மதில்களாக இருக்கட்டும்.
பழுதற்ற பண்பாடுகள் தழும்பி
மொழியோடு யுத்தமிடாது
மொழிச் சுளற்சியில் அரசாளட்டும்.
இன்னும் வளரும் தமிழ்.
இன்னும் புதுமைகள் காணும்.
பெற்றோர், உற்றோர் கைகொடுப்பில்
அற்புதமாய்த் தமிழ் முன்னேறும்.

கலைகளையேற்றுக் கருத்து வீசாஉலகில்
நிலையாலுயர்ந்தெமைக் கௌரவித்தற்கு
மலைபோல் மனது வேண்டும்.
அலைகள் வலைப்பணியது பாராட்டுடைத்து.
அலைகளின் சேவை மகத்தானது.
விலையற்றது, விமரிசனத்திற்கு அப்பாற்;பட்டது.
மாலையிடுகிறோம் மனதால் மகிழ்ந்து.
மூலை முடுக்கெல்லாம் அலைகள் புகுந்து வளம் படுத்தட்டும்.

வாழ்க! வளர்க!
அலைகளென்றால் கே.எஸ் துரை.
கே.எஸ்.துரையென்றால் அலைகள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

25-9-2012.

5. பேட்டி – நேர்முகம் – விழா –

பூமதீன் கலந்தர்புதுமைத்தமிழ்த்தென்றல்

February 16, 2016 · 

பெயர்:- வேதா. இலங்காதிலகம்.

புனைப்பெயர்கள்:- கோவைக்கவி,பா வானதி,கோவைக்கோதை!

விலாசம்:- யாழ்ப்பாணம். கோப்பாய்.

தற்காலிக முகவரி:- ஓகுஸ், டென்மார்க்.

தொழில்:- கற்பித்தல்

கல்வி:–
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு 12 (ஏ.எல்) – டென்மார்க்கில் டெனிஷ்ல் 3 வருடப்படிப்பு பாலர் பாடசாலை ஆசிரியர் (பெட்டகோ)

பட்டங்கள்:
டெனிஷ் பெட்டகோ, தமிழ் கவிதையால், கவியூற்று, ( அன்று) இன்று மேலும், கீழே படத்தில் தருகிறேன்.

விருதுகள்: ஆறுமுக நாவலர் விருது.

வேதா. இலங்காதிலகம், அம்மா அவர்கள்!

யாழ்ப்பாணம். கோப்பாயில் 2 வருடங்கள் ஆரம்பபாடசாலையிலும், கொரண (Horana) நகரத்தில் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகவும் பணியாற்றி, பின்னர் டென்மார்க் நாட்டிலும் ஆசிரியயையாகப்பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி, இலண்டன் தமிழ் வானொலி டென்மார்க் செய்திகள், போன்ற ஊடகங்களில் கவிதைகள், செய்திகள் வாசிப்பாளராகவும்,
திகழ்ந்தவர்.

மேலும், டென்மார்க்கில் காகம், கற்பகம் எனும் சஞ்சிகைகளில், யேர்மனிய பூவரசு மண், தமிழ் நாதம், கலைவிளக்கும் மலேசிய செம்பருத்தி, இலண்டன் சுடரொளி, பிரான்ஸ் வெற்றிமணி, இந்திய, நாளை நமதே, இனிய நந்தவனம், ஏழைதாசன். நாளை விடியும் போன்ற சஞ்சிகைகளிலும் தனது எழுத்தாற்றலால் முத்திரை பதித்த பெண் கவிதாயினியும் எழுத்தாளருமாவார்.

மேலும், டென்மார்க் வானவில்,அலைகள் டென்மார்க், டென்மார்க் ரமிழ், நியூஸ்.டி.கே, பதிவுகள்.கொம், முத்துக்கமலம், வார்ப்பு, தமிழ் விசை, தமிழ்ஆத்தேர்ஸ்.கொம், தமிழ்தோட்டம், நெய்தல், எழுத்து.கொம், அப்பால் தமிழ், ஊடறு, வல்லமை போன்ற இணையத்தளங்களிலும் எழுதிவருகின்றார்

கடந்த 1976 லிருந்து இலங்கை வானொலியில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, சேவை நிகழ்ச்சிக்கு கவிதைகளை எழுதியதின்மூலம் இலக்கியத்துறையில் காலடி வைத்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருப்பவர்!

இவர் சிறந்த நூலாசிரியையுமாவார், இவரது படைப்புகளில், 2002ல் வேதாவின் கவிதைகள் தொகுப்பு, 2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு, குழந்தைகள் இளையோர் சிறக்க, 2007ல் உணர்வுப் பூக்கள் தொகுப்பு, {இதில் இவரது 69 கவிதைகளும், அவரது கணவரின் 43 கவிதைகளும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2018ல் பெற்றோரியலில் சிற்றலைகள், குறள் தாழிசை என இரு சிறுவர், இளையோர் இலக்கிய நூல்களாக வெளியிட்டுள்ளார்.(இவைகளை “நூலகம் டொற் ஓர்க் கொம். இணையத்தில் பார்க்கலாம்)

மேலும் 2010 முதல், “வேதாவின் வலை” (http:// kovaikkavi.wordpress. com) கோவைக் கோதை.வேட்பிரஸ்.கொம் (https://kovaikkothai.wordpress.com) கோவைக்கோதை.புளொஸ்பொட்.கொம் (kovaikkothai.blogspot.com) என்று 3 இணையத் தளங்கள் சொந்தமாக நடத்தி வருகிறார். கடந்த 2015 வைகாசி 2ம் திகதி டென்மார்க்கில் ஓகுஸ்ல் நகரத்து மக்களால் சிறந்த அங்கீகாரமாக ஒரு பாராட்டுவிழாவும் இவருக்கு நடத்தப்பட்டு ” ஆறுமுக நாவலர் விருது” வழங்கப்பட்டது சிற‌ப்புக் குறிப்பாகும்!

இத்தனை புகழ் மாலைகளைச்சும‌ந்து கொண்டிருக்கும், வேதா. இலங்காதிலகம்,
அம்மாவுக்கு புதுமைத்தமிழ்த்தென்றல் தலை வணங்கி வாழ்த்துகின்றது,
நன்றி.

4.பேட்டி – நேர்முகம் – விழா –

1 year ago

Vetha Langathilakam is with Ramanan Ramachandran.

October 1, 2018 at 3:43 PM · 

எமது மகன் (Meena’s son ) ரமணன் ராமச்சந்திரனின் மகன் காருண்யன் பாலர் பாடசாலை கலந்து நடாத்திய முத்தமிழ் விழாவில் அந்தப் பாலர் பாடசாலை எட்டு ஆசிரியர்களிற்கு எனது நூல்களை அன்பளிப்புச்செய்த போது. காருண்யனும் மீசை வைத்து தலைப்பா போட்டு கோலாட்டம் ஆடி ப் பங்கு பற்றினார்.
மிக மகிழ்வான நாளாக பயனுடன் அன்று கழிந்தது

எனது ஊரில் கோப்பாய் பதியில் இது நடந்தது. மிக மகிழ்வு…
ரமணனுக்கும் நன்றி

3. பேட்டி – நேர்முகம் – விழா –

J.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கு’ ஈழவாடை- ‘ விழா கௌரவ அதிதி

பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. எனது நூல்களையும் அங்கு கொடுக்க முடிந்தது ம் மகிழ்ச்சி.