*
குழந்தை.
*
வஞ்சகம் அறியாத
மிஞ்சுதலற்ற பருவம்.
பிஞ்சுக் குழந்தை
மஞ்சள் கட்டி.
¤
பஞ்சு மென்மைப்
பிஞ்சு உடல்.
கொஞ்சம் புஞ்சம்.(திரட்சி)
புஞ்சுதலாக்கும் (ஒன்று சேர்க்கும்) குடும்பத்தை.
¤
பிஞ்சுப்பிறையான மழலை.
பஞ்சணைப் புதையல்.
பிஞ்சுக் குழந்தையால்
பஞ்சமற்ற இன்பம்.
¤
சஞ்சலமழிக்கும் குழந்தை
செஞ்சுடர் குடும்பத்திற்கு.
துஞ்சுதலைப் பர்த்தால்
நெஞ்சு நிறையும்.
¤
குஞ்சுக் கால்களின்
கொஞ்சு நடையழகில்
ஊஞ்சலாடும் மனம்
குஞ்சிரிப்பு (புன்னகை) கோடியாகும்.
¤
அஞ்சுதல் இல்லாத
அஞ்சுகப் பேச்சு.
கொஞ்சிடும் சர்வலோக
சஞ்சீவி செர்க்கம்.
¤
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 11-8-16
*
குழந்தை
*
பஞ்சு உடல் மிஞ்சும் அழகு
கொஞ்சிடும் தெய்வம். கல்லும் கரையும்
பிஞ்சு மழலை மொழி கேட்டால்.
பச்சிளம் குழந்தை ஒரு வயது வரை.
நிறை வாழ்வின் அங்கீகாரம்.
நிகரற்ற இல்லற இன்பம் குழந்தை
கருவறை திறக்கும் திறவுகோல்.
கருவறைச் சிப்பியில் வந்துதித்த முத்து.
குழந்தையால் தான் தாலாட்டு வந்தது.
குடும்ப வாரிசுச் சங்கிலி வளையம்.
இல்லத்து விளக்கு பூமியின் நிலா.
அன்பின் இலக்கணம் சுவர்ண விக்கிரகம்.
உயிர் ஓவியம் வரம் இது.
குழந்தையில்லாதவர் தவமிருந்து பெறும் கொடை
பெற்றோர் அந்தஸ்து தரும் உயிர் சாரல்
பிரசவமென்பது குழந்தையின் மண்ணுலகப் பயணம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.22-6-16
*
Samme katu another poem:- https://kovaikkavi.wordpress.com/2016/11/28/458-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/
*