ஆசைப் பெரியப்பா பெரியம்மாவின் 50வது திருமண பொன்விழா வாழ்த்து
புங்கையூர் மண்ணில் உதித்த வைரங்கள்
பிரான்சு மண்ணில் வாழுமெம்மன்புச் சொத்துகள்.
பெருமையுடன் எட்டினார் திருமண பொன்விழா.
தற்பரானந்தம் – காந்திமதி இணையருக்கு இன்பநாள்.
தித்திக்கும் ஆனந்தம்! ஆகா கொண்டாட்டம்!
நாட்டில் அந்தக் காலத்திலேயே உழைப்பால்
உயரலாம் என்று நமக்கெல்லாம் உதாரணமாக,
எடுத்துக் காட்டாக வாழ்ந்திட்ட பாசக்காரர்.
வியாபார உத்தியாளர், ஓயாத உழைப ;பாளி.
எட்டு உடன் பிறப்புகளோடு மூத்தவரான பெரியம்மா
எல்லோரையும் தாயிற்குத் தாயாக வாழ்வுக்கடலுள்
தன் நேசச் சிறகிற்குள் பாதுகாத்த கப்ரன்.
அத்தனை குடும்பங்களையும் ஒருங்கிணைத்து
ஆதரித்து பாசமீந்து பராமரித்தார்.
தூரதேசமானாலும் தொலைபேசித் தொப்புள் கொடியால்
பட்டுப்பாசம் இணைப்பவர்.
எம்மைச் சிறுவயதில் பாடசாலை செல்லும்
பாதையில் இனிப்பு பழவகைகள் பால் தந்து
அணைத்தவர்.
கலைந்த தலையை எண்ணெய் பூசி
வாரியழகுபடுத்தி பாடசாலைக்கு அனுப்பிய
ஆசைப் பெரியம்மாவே எங்களிற்கு அடுத்த
பிறவியிலும ; வேண்டும்.
ஒளித் தடமான இவர்கள்
திருமண பொன்விழாவிற்கு எங்கள் மனமார்ந்த
மங்கல நல்வாழ்த்துகள் வாழ்க நீடு!
இது டென்மார்க்கிலிருந்து
சி.மு.கணேசமூர்த்தி குடும்பத்தினரின் இனிய வாழ்த்துகள். 30-7-2016