தொலைத்தவை எத்தனையோ! 16
முன்னைய இடத்தில் வாழ்ந்தது போல அத்தனை வசதியும் இங்கும் இருந்தது.
தென்னை மரங்கள் அதிகமாகவும்
ஒரு பென்னம் பெரிய ஈரப்பலா மரமும் மேலதிகமாக இருந்தது.
ஈரப்பலாவில் கறியும் பொரியலும் செய்யலாம். அவித்த ஈரப்பலாவை சிறு சிறு சீவலாக்கி வெயிலில் காய வைத்து சீனிப்பாணி காய்ச்சி காய்ந்த சீவல்களைப் போட்டுக் கிளறினால் நல்ல பணியாரமாக வரும் சுவையும் நன்றாக இருக்கும். இதுவும் சிங்களத்தில் பிரபலம்.
பழைய வீட்டில் போகன்வில்லா பலவகை நிறங்களில் உருவாக்கியது போல இங்கு ஐந்தூரியம் மலர் செடிகள் உருவாக்கினோம்.
பலவகை நிறங்கள், பச்சை நிற ஐந்தூரியமும் இருந்தது. எனக்கு ஆச்சரியம். இலங்கை பேராதனைப் பூங்காவில் பச்சை நிற மலர் கண்டேன்.
தேங்காய் உரித்த தும்புகள் உரமாகப் போடுவோம்.
பழைய இடத்தில் நாங்களாகவே சீமெந்தில் பூச்சட்டிகள் செய்து பாவனைக்கு எடுத்தோம். பல வகை அச்சுகள் செய்து உருவாக்கினோம்.
இப்படியாக.
ஓரு சமயம் பூச்சட்டியில் இருந்தவற்றை வரிசையாக நிலத்தில் நட்டும் பராமரித்தோம். ஐந்தூரியம் மலர்களின் மேல் இருந்த ஆசையால் தான் தொலைத்தவை தலைப்பில் எஸ்டேட் வாழ்வு தொடரானது.
அதை படத்தில் காண்கிறீர்கள்.
முற்றத்தில் பெரிய மாமரம். சுற்றி வர றப்பர் மரங்கள்.
இந்த முற்றத்தில் தான் முதன் முதலில் சொப்பர் சைக்கிள் ஓடினேன். கணவர் பின்னால் நின்று பிடிக்கிறேன் என்று கூற அந்த நம்பிக்கையில் நான் என்பாட்டில் நிதானமாக ஓடினேன். அவர் உதவி செய்யாமலே நான் சைக்கிள் ஓடினேன். பின்பு மாலை நேரங்களில் சில நாட்களில் சைக்கிளில் ஒரு உலா செல்வது வழமையானது.
பலவகையான அழகிய இலைகள் உள்ள செடிகளும் வளர்த்தோம்.
இதில் காணும் அனைத்தும் எம்மிடம் இருந்தது.
போகோனியா (Bogonia ) எனும் வகை செடிகளும் வளர்த்தோம். இதுவும் புது விதங்கள் எங்காவது கண்டால் கணவர் கொண்டு வந்து தருவார். பலவகைகளாக வளர்த்தோம். உதாரணத்திற்கு சிலவற்றைப் படத்தில் காண்கிறீர்கள்.
மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடரலாம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 31-10-2017