4. தொலைத்தவை எத்தனையோ! 16

 

untitled

தொலைத்தவை எத்தனையோ! 16

 

முன்னைய இடத்தில் வாழ்ந்தது போல அத்தனை வசதியும் இங்கும் இருந்தது.

தென்னை மரங்கள் அதிகமாகவும்

Artocarpus-altilis-foliage

ஒரு பென்னம் பெரிய ஈரப்பலா மரமும் மேலதிகமாக இருந்தது.

Breadfruit_-_Artocarpus_altilis_oo2Eerapila Curry poriyal-2
ஈரப்பலாவில் கறியும் பொரியலும் செய்யலாம். அவித்த ஈரப்பலாவை சிறு சிறு சீவலாக்கி வெயிலில் காய வைத்து சீனிப்பாணி காய்ச்சி காய்ந்த சீவல்களைப் போட்டுக் கிளறினால் நல்ல பணியாரமாக வரும் சுவையும் நன்றாக இருக்கும். இதுவும் சிங்களத்தில் பிரபலம்.

பழைய வீட்டில் போகன்வில்லா பலவகை நிறங்களில் உருவாக்கியது போல இங்கு ஐந்தூரியம் மலர் செடிகள் உருவாக்கினோம்.

10-bag-Rare-font-b-Flower-b-font-Seeds-font-b-Anthurium-b-font-Andraeanu-Seeds100_1854-150x150

பலவகை நிறங்கள், பச்சை நிற ஐந்தூரியமும் இருந்தது. எனக்கு ஆச்சரியம். இலங்கை பேராதனைப் பூங்காவில் பச்சை நிற மலர் கண்டேன்.
தேங்காய் உரித்த தும்புகள் உரமாகப் போடுவோம்.

பழைய இடத்தில் நாங்களாகவே சீமெந்தில் பூச்சட்டிகள் செய்து பாவனைக்கு எடுத்தோம். பல வகை அச்சுகள் செய்து உருவாக்கினோம்.

flower

இப்படியாக.
ஓரு சமயம் பூச்சட்டியில் இருந்தவற்றை வரிசையாக நிலத்தில் நட்டும் பராமரித்தோம்.  ஐந்தூரியம் மலர்களின் மேல் இருந்த ஆசையால் தான் தொலைத்தவை  தலைப்பில் எஸ்டேட் வாழ்வு தொடரானது.

Billede-2

Billede-1

அதை படத்தில் காண்கிறீர்கள்.
முற்றத்தில் பெரிய மாமரம். சுற்றி வர றப்பர் மரங்கள்.

இந்த முற்றத்தில் தான் முதன் முதலில் சொப்பர் சைக்கிள் ஓடினேன். கணவர் பின்னால் நின்று பிடிக்கிறேன் என்று கூற அந்த நம்பிக்கையில் நான் என்பாட்டில் நிதானமாக ஓடினேன். அவர் உதவி செய்யாமலே நான் சைக்கிள் ஓடினேன். பின்பு மாலை நேரங்களில் சில நாட்களில் சைக்கிளில் ஒரு உலா செல்வது வழமையானது.

பலவகையான அழகிய இலைகள் உள்ள செடிகளும் வளர்த்தோம்.

7_sep_lowcd5b8f5f6efdf0c1063ca4b8955a8520

இதில் காணும் அனைத்தும் எம்மிடம் இருந்தது.

249415_3
போகோனியா (Bogonia ) எனும் வகை செடிகளும் வளர்த்தோம். இதுவும் புது விதங்கள் எங்காவது கண்டால் கணவர் கொண்டு வந்து தருவார். பலவகைகளாக வளர்த்தோம். உதாரணத்திற்கு சிலவற்றைப் படத்தில் காண்கிறீர்கள்.
மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடரலாம்.

hheee211

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 31-10-2017

 

red-flower-leaves-swirl-divider_Xyj9uf_SB_PS

 

 

 

27. பா மாலிகை (கதம்பம்) நிறை   நோக்கிற்காய்…(519)

12182855_934927629921425_3476452656964753697_o

நிறை   நோக்கிற்காய்…

*

நன்னோக்கு வீசுவதற்கு
கண்ணோக்கு எளிமையாக்கு
இன்னோக்கு முதலாக்கு
நின்னோக்கு புகழாக்கு.

*

கடும்நோக்கு கிருமி நோக்கு
சுடும் வாக்கு சுலபமாக்கு.
தொடும் வாக்கு மென்னோக்கு
கருணையாக்கு புனித நோக்கு.

*

செந்நாக்கு அண்ணாக்கு
வன்நாக்கு வறியதாக்கு
தன்நாக்கு குளிர்மையாக்கு
இந்நோக்கு முன்னோக்கு.

*

தனித்துவமாக்கு தகவாக்கு
மனிதநோக்கு மகாநோக்கு.
இனிதாக்கு இசைவாக்கு
குறைநோக்கு குனிவுக்கு.

*

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-10-2015

*

posted to Muthukamalam .com

divider lines.jpg - A

2. பாமாலிகை (தாய்நிலம்.37)சிலியும் இலங்கையும்…

 

-kk

‘*

சிலியும் இலங்கையும்…வேதா. இலங்காதிலகம்.

October 28, 2010

*

சிலியும் இலங்கையும்…

பாதாளச் சுரங்கத்தில் முப்பத்துமூன்றுயிர்
பரிதாபமாக மாட்டிக் கொண்டனர்.
பதறிய அரசு திறமையாகப்
பரிகாரம் கண்டது உயிர் காக்க.
பாதுகாப்பாய் வெளிவந்த உறவுகளை
பரிவாய் அணைத்து வரவேற்றது.
பாருங்கள் சிலி நாட்டு மனிதாபிமானம்!

கொத்துக் குண்டு இரசாயனக் குண்டுகளால்
குழந்தைகள் அப்பாவித் தமிழர்களைக்
கொன்று குவித்தனர் நம்நாட்டில்.
நாற்பதாயிரம் உயிர்களை நசுக்கினர்.
நாயினும் கேவலமாக மனிதர்களை
நாடற்றவராய் ஆக்கி அங்கு
நாட்டு மனிதர் காட்டுமனிதராகிறார்.
நாற்றமுடை மனிதாபிமானம்.

எங்கு யாரிடம் கேட்பது!
தங்கு தடையின்றி வன்முறையற்று
பொங்குது கவன ஈர்ப்புகள்
இங்கும் புலம் பெயர்ந்தோர் டென்மார்க்கிலும்
கேணிங் நகரிலிருந்து மூவர்
கொப்பென்கேகனுக்கு நடைப் பயணம்.
எத்தனை முயற்சிகள் உலகெங்கினும்!
அத்தனையும் பலன் தரட்டும்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
25-10-2010.

http://www.alaikal.com/news/?p=48901

 

cc

3 . குறுகிய வரிகள் (8வதில் 19-20-21)

 

 

dfabcd766ba9c0a9415791fdb131f628

*

jj

*

Unavngivet

*

oli

*

22 October 2010 at 19:45 ·

குரல் வளம்.

குரல் வளமும், கம்பீரமும்
கரமிணைக்கிறது ஒலிபரப்பாளனுக்கு.
உரமுடைய கல்வி, பட்டமல்ல
தரமுடைய குரல் உயர்த்துகிறது.
மூக்கிலிருந்து வரும் குரல்
கீச்சுக் குரலும் எடுபடாது.
நாபிக் கமலத்திலிருந்து வரும்
நாதக் குரலே ரசனையானது,

*

 

psychodelicbanner

3. தொலைத்தவை எத்தனையோ- 15

 

untitled

தொலைத்தவை எத்தனையோ- 15

*

காய்கறிகளும் பழங்களும் இப்படியாக இருக்க பூச்செடிகளும் ஒரு பக்கம். ரோஜாக்கள், மணிவாழைகள்,

diffrentsnurserylive-catagory-bouganvillia-plants

போகன்வில்லாக்கள், குறோட்டன் வகைகள் என்று பல வகைகள் ஒவ்வொரு இனத்திலும் தேடி உருவாக்கினோம். எனது பூக்கன்றுப் பைத்தியத்தைத் தெரிந்து இவர் போகும் இடங்களிலும் எனக்குக் கிளைகள் வாங்கி வந்து தருவார். நட்டு உண்டாக்க.

Free-Shipping-High-Quality-100pcs-Mix-color-23-color-Bougainvillea-spectabilis-Willd-Seeds-Bougainvillea-seeds.jpg_640x640
போகன் வில்லா வெள்ளை, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு என்று பல வகைகள் இருந்தன.
அப்போது என் தம்பி த பினான்ஸ் கம்பெனியில் கொழும்பில் வேலை. மாதம் ஒரு தடவை வருவார். வீடு உல்லாசப் பயணக் கொட்டகை போல உள்ளது அக்கா என்பார்.
வீட்டின் முன்புற புல் வெளியில் நின்று பார்த்தால் கீழே

Scan-2

 முள்ளுக்கம்பி ஓரங்களில் குறோட்டன் செடிகள் தெரிகின்றன.

Scan-3

தேயிலை மரங்கள் மட்டமாகவும் நிழலுக்கான மலேசியா மரங்களும் தெரியும். ஓரு பொம்மையை தேயிலைச் செடியில் வைத்தால் அப்படியே உருண்டு போய் கீழே  விழுவது  போல  தேயிலைச் செடிகள் மட்டமாக இருக்கும்.
நானும் இவரும் கடைக்குப் போய் நடந்து வரும் போது தேயிலை மரங்கள் மட்டமாக இல்லாவிடில் இது சரியில்லையே என்பேன். அடுத்த நாள் நல்ல மட்டமாகச் செய்ய ஆட்களைப் போட்டு அந்த மலையையே திருத்துவார்.

அப்போதே நல்ல விமர்சிகையாக நான் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன்.

Kolukkumalai-Tea-Estate_Munnar

16 ஏக்கர் என்று ஒரு பகுதி இப்படியான தோற்றமாக இருக்கும்.

வாகை மரத்தில் குற்றிகளாக முதலில் ஒரு  குற்றி வீட்டுக்கு வந்தது. அதை நிறம் தீட்டினேன் அழகாக இருந்தது. பிறகு தொழிலாளரைக் கொண்டு வெட்டி தந்தார் 5 குற்றிகள் வித்தியாசமாக நிறங்கள் தீட்டி பூச்சட்டி வைக்கவும் வெளியே விநோதமாக அமரவும் பாவித்தோம்.

அக்காலத்தில் பிளாஸ்ரிக்கில் பல நிறங்களாக இருக்கைகள் வெளி வந்தன. ஒன்று 60 ரூபா இலங்கைப் பணமாக.

plastic
இது போன்றது அது. அப்போது அது பெரிய பணம் . ஆகையால் இப்படி ஒரு யோசனையாக நானே நிறம் தீட்டினேன். அழகுக்கு அழகும் பொருளுக்கு பொருளுமானது.

521427_10200149135908322_824376021_n542604_10200150924393033_1215618048_n
நாம் இங்கு மாறும் போது அதில் தம்பி இரண்டு எடுத்தார். அதனால் அதைப் படமாக இப்போது காட்ட முடிந்தது.  இப்போதும் அவர் அதை வைத்திருக்கிறார்.
பின்பு என் கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க பிரதான பிரிவுக்கு மாறினோம்.

 

hheee211

எஸடேட் வீட்டிலிருந்து அதாவது விறாந்தையிலிருந்து
முன் பக்கம் பார்த்தால் இப்படித் தெரியும்.

 

என் கணவரின் தாயார் கொக்கேனை எஸ்டேட்டில் உருவாக்கினார் ஒரு அம்மன் கோயில்.
இதற்கு கணவரும் நானுமாக ஒரு பிள்ளையார் சிலையைச் சீமெந்தில் உருவாக்கினோம்.
முதலில் அச்சு உருவாக்கிபின்பு உரு அமைத்தோம். இந்தப் படத்தில் தெரியும் சிலை தான் அது.

19-10-2017

வீட்டிலிருந்து முன்புறத் தோற்றம்.

26. பா மாலிகை (கதம்பம்) ஆதிசிவன் தந்த ஆடற்கலை+கலைகளில் பரதம். (518)

b44317308f5068b4fbcd487aac1b0ece--actress-pics-dance-company

*

ஆதிசிவன் தந்த ஆடற்கலை

*

தென்னிந்திய தமிழ்நாட்டு தேவ கலையிது
இன்னமுத பாவம், ராகம், தாளமானது
பின்னிய உணர்வு, இசை, தாளமானது.
தொன்மையாம் பரதமுனிவர் உருவாக்கிய பரதமது.
ஆதிசிவன் தந்த ஆடற்கலை என்பது.
*
சிவனே ஆடினார் ஆனந்த தாண்டவம்
சினத்தில் ஆடினார் ருத்திர தாண்டவம்.
சிறந்த உடற்பயிற்சியாம் நடனப் பயிற்சியால்
பிறக்கும் அரங்கேற்ற விழாவாம் அரங்கப்பிரவேசம்.
கிறங்கும் விழிமொழி, உடல்மொழி அழகியல்.
*
மானென குதித்து மீனென நெளியும்
பாவனைகள் நிறைந்த ஆடல் எழுபதாண்டாக
பரதநாட்டியம் பெயரோடு திகழும் தெய்வீகம்.
தேனுண்ணும் வண்டாகக் காண்பவர் மயங்க
ஊனையுருக்கும் கலை இரண்டாயிரமாண்டுகள் முன்னையது.
*
கால்களில் சலங்கை கொஞ்சும் ஆடல்.
காண்பவர் மனமுடல் இரசனையில் அசைத்தல்
வண்ண ஆடை அணிகளுடன் மயிலென
எண்ணற்ற முத்திரைகள் அடவு ஐதியாகி
பண்ணுடன் நவரச பாவங்கள் இணைவது.
*
உடலை ஊடகமாகக் கொண்ட தொடர்பாடல்.
சடங்குகளில், இறைவழிபாடு, காதலில் இணைந்து
நடனம் ஆழ்மனதை கிளர்த்தும் சமூகத்தொடர்பாடல்
புடமிட்டு மனிதனின் கலாச்சாரம் பேணி
இடங்கொண்ட வாத்திய இசைகளோடு ஆத்மதிருப்தியளிக்கும்
*
கண்ணழகு, உடலழகு, கை மொழியோடு
நுண்ணிய அபிநயத்தால் கதை சொல்லும்
விண்ணவரும் சொக்கும் பக்குவக் கலை
மண்ணிலே சிறந்த நூதனக் கலை பரதம்.
தண்மை நிலை தரும் கலை.
*
vetha,Langathilakam, Denmark.  12-10-2017.
____________________

கலைகளில் பரதம்.  

*

பரதமுனிவர் அறிமுகமாக்கிய உயரிய கலை
பாவம்,   ராகம்,   தாளமிணைந்த சொல்
தேவதாசிகளின் சதிராட்டத்தின் நெறிப்படுத்திய
வடிவம். சின்ன மேளம், கூத்தாடல்
தாசி ஆட்டம். எழுபதாண்டுகளாகப் பரதமானது.

*

முகபாவனைகளில் நவரசங்கள் பிறக்கும் அழகு
அகம் குளிரச் செய்யுமுடல் மொழி.
முத்திரையிடும் கைவழி கண்கள் செல்ல
கண்கள் வழியோடிதயமும் செல்லும் இன்பவழி.
பாவரசமிணைந்த அறுபத்து நான்கு கலைகளிலொன்று.

*

சஞ்சலமின்றிச் சலங்கையைக் கண்களிலொற்றிப் பூசித்து
அஞ்சாது அழகு மயிலாக ஆட
கொஞ்சிடும் சலங்கை தவறாது தாளமிட
வஞ்சியவள் சந்தத்தில் பரவசமாய் ஆடுவாள்.
கெஞ்சிடும் மனம் இன்னொரு தடவையென்று.

*

கண்கள் கருவண்டாய்ச் சுழன்று மொய்க்க
அண்ணாவியசைவில் மேடையில் கால்கள் பாவாது
வண்ணமாய் ஒயிலாயாடி அபிநயத்தில் எண்ணத்தில்
கண்ணன் லீலைகள் விரிந்திட அழகுப்
பெண் ராதையைத் தேடுவதோ மீயழகு.

*

உடல், மனம், ரசனைக்குப் பயிற்சி
உன்னதத் தென்னிந்தியர் தமிழர் நடனம்

இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னைய உருவாக்கம்.
அடவு,  ஐதி, பாடல் நட்டுவாங்கமென
இசைக் கருவிகளின் கூட்டுக் களியாடலுமாகும்.

*

Vetha.langathilakam. Denmark.  26-5-2017.

544790_589749011038301_969070378_n

25. பா மாலிகை (கதம்பம்)எது சுமை (517)

 

22196442_10212757101379579_440822931906335277_n

*

எது சுமை

*

சுமை, பொருட்களின் நிறையும்
சுமையாகும் மனதின் பிரச்சினைகளும்
தமை வாட்டிக் குமைகிறது.
அமைவதில் சுகமான சுமையுமுண்டு.
சமைத்தலோ உருசியான சுமை.

*

உடலுக்கு உயிர் சுமையில்லை
கடலுக்கு நீர், மீன்,
திடலுக்கு மலை சுமையில்லை.
அடம் பிடிக்கும் பிள்ளை
அடங்காத சுமை பெற்றவருக்கு.

*

தமிழ் சுமையில்லை என்றும்
அமிழ்தினும் இனிப்பது உயிரிது.
தன்னம்பிக்கையற்ற மனதிற்கு அனைத்தும்
தரணியில் தாங்கிடச் சுமையே.
தைரியம் வேண்டும் மனதிற்கு.

*

சுமையென்ற நினைப்பே சுமை.
இமை கண்ணிற்குச் சுமையில்லை.
உமை சிவனுக்குச் சுமையா!
அமைவதைத் துணிவோடு எதிர்கொள்ள
நம்பிக்கைத் தேனில் இலேசாகும்.

*

சுமை என்ற தலைப்பில் எனது முதல் வலையான வேதாவின் வலையில் உள்ள கவிதையின் இணைப்பு இது.

https://kovaikkavi.wordpress.com/2010/09/21/83-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

வேதா. இலங்காதிலகம். டென்மார்க், 15-6-2017

*

 

lines-c

8. சான்றிதழ்கள் கவிதைகள்(18 பசி படுத்தும் பாடு.)

kavijula - psai paduththum

*

அனைவருக்கும் வணக்கம்
நமது கவியுலகப் பூஞ்சோலை குழுமத்தில் 120–8–16 நாளாம் போட்டி கவிதையின்#படத்திற்கேற்ற_புதுக்_கவிதை_நடுவராக#Rifnafthaf_Ahammed பங்கேற்று முத்தான கவிதையை தேர்வு செய்துள்ளார்கள்
கவிதையின் வெற்றியாளர்#கவிதாயினி_Vetha_Langathilakamஅவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் பங்கு பெற்ற ஏனையோருக்கு வாழ்த்துக்கள் ,,,, நடுவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
🔘******🔘*****🔘*****🔘*******🔘******🔘******🔘*****🔘******🔘
போட்டி 02.
*
18301607_10211423763606968_8190890911102142589_n
*

பசி படுத்தும் பாடு

*

முதுமை என்ன இளமையென்ன
பசி படுத்தும் பாடு
பெரும் பாடு! தன்மானமாக
வாழ எண்ணுகிறார் மூதாட்டி.
*
தள்ளாடும் முதுமையிலும் கடதாசிகள்
பொறுக்கிச் சேகரித்து, விற்று
” இரவாமை கோடி பெறும் ”
என்று உழைக்குமிவர் உயர்ந்தவர்.
*
உதவிக்கு யாருமற்ற நிலையில்
தானாகச் சுமையை இழுத்துச்
செல்லுமிவர் போன்று உலகில்
ஏழ்மை இயலாமையில் பலர்!
*
பசி ஏளனத்துடன் பாட்டியைப்
பார்க்கும்! பாட்டி கால்கள்
நீட்டிஓய்வெடுப்பார். உழை!
உழை உயிரிழக்கும் வரையென்று!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 20-8-2016.
*

Another one:-   

🔘******🔘*****🔘*****🔘*******🔘******🔘******🔘*****

2. தொலைத்தவை எத்தனையோ- 14

 

untitled

தொலைத்தவை எத்தனையோ- 14

 

இவைகள் கழுத்துறை மாவட்டத்து தேயிலை, றப்பர் கொக்கேனைத் தோட்டத்து நினைவுகள்.

பழங்களுக்காக வாழைகள் நிறையவே இருந்தன. மாறி மாறி வாழைக் குலைகள் வந்த வண்ணமிருக்கும்.

1034-7-Amazing-Health-Benefits-Of-Banana-FlowersAfbeeldingen_Algemeen_Foodstyling_auto_auto_c430_c323_q_bananen_2
அதே போல வாழைப் பொத்தியும் (பூவும்) சமையலுக்கு உதவும்.
முள்ளுக் கம்பி வேலியோரம் அன்னாசி முளைகளை ஊன்றுவோம். அதுவும் எப்போதும் பழம் தந்து உதவும்.

annasiannasi palam

Unavngivet

அன்று நாம்.
பின்னால் தெரியும் வாழைகள்.

கசுக்கொட்டை மரமும் அதற்குரிய காலத்தில் கசுக்கொட்டைப் பழமும் தரும்.

cashew-plantht2546
பப்பாளி மரங்கள் அடிக்கடி பழம் தரும் மறந்தால் காகம் கொத்தி காட்டித் தரும்.

பப்பாளி-thamil.co_.uk_பப்பாளி.thamil.co_.uk_

லாவுள் பழம் அதன் காலத்தில் பழம் தரும்.

லாவுul பழம்

கோப்பி மரம் வேலியோரம்.  கோப்பிப் பழம் நன்கு பழுத்தால் மிக சுவையாக இருக்கும்.சுவைத்துள்ளேன்.
கோப்பிப் பூ மிக வாசனையாக இருக்கும்.அழகாகவும் இருக்ககும்.
Coffee-Plant-Entrepreneurs-Should-Take-A-Look-At-Coffee-Farmingred-coffee-beans-branch-coffee-tree-white-background-74319182

1200px-Coffee_Flowers505427197-coffee-tree-coffee-cultivation-coffee-plantation-tanzania

கோப்பிப் பழங்கள் பிடுங்கி வெயிலில் காயவைத்து உரலில் இடித்து தோல் போக்கி நாமே தயாரிப்போம் கோப்பித் தூள். எனக்கு நல்ல நினைவு ஒரு தடவை கோப்பி விற்ற காசில் இவருக்கு ஒரு ரிசேட் வாங்கியது.

பலா மரங்களும் தன் காலத்திற்குப் பலாப்பழம் தரும்.

palapalam

அது தவிர தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளரும் கொண்டு வந்து தருவார்கள். பலாக் கொட்டைகளைப் பல வகையில் சமைக்கலாம்.

பலா-விதைகள்-thamil.co_.uk_polosmallun

இதை அவித்து தோலுரித்து உரலில் துவைத்து தேங்காய்பூ சினி கலந்த உருண்டைகளாகப் பிடித்து மாலை நேரத் தேனீருடன் ருசிக்கலாம். பலாக்கொட்டைப் பொரியல் செய்யலாம். கறி வைக்கலாம். கொட்டையை அடுப்பில் சுட்டு உண்ணலாம்.

அதே போல முற்றிய பலாக்காயில் கறியும், பெரிதாக பலாச்சுளைகளை அவித்து தேங்காய் பூவுடன் கலந்தும் உண்போம். வெகு ருசி.
பிஞ்சுப் பலாக்காயைத் தோல் சீவி கொந்தல் செய்து அதாவது மிகச் சிறு தூளாக வெட்டி வெங்காயம் மிளகாய் கடுகு பெ.ரும் சீரகம் தாளித்து அவித்து எடுத்தால் மிக சுவை. இது பொலெஸ் என்று சிங்களத்தில் வெகு பிரபலம். green jack fruit polos. மேலே சமைத்தபடி தட்டில் உள்ளது பொலேஸ்.சும்மாவும். சாப்பிடலாம் சோறுடன் கலந்தும் உண்ணலாம்.மிக சுவை. சில வீட்டில் சிங்கள் ஏழைகளிண் உணவாகவும் இருக்கும்.

வெற்றிலைக் கொடி வைத்திருந்தோம்.

TH04BETEL-BRSC

தொழிலாளர்களுக்கு விற்போம். கோழிகள் வளர்த்து முட்டைகள் விற்றோம்.
தென்னை மரங்கள் இருந்தது. நமது தேவைக்குப் பாவிப்போம்.

இப்படியாக பணம் செலவழிக்காது ஒரு அருமையான வாழ்வு வாழ்ந்தோம். இன்றும் கனவில் அந்த வாழ்வு வரும். பசுமையானவை.

hheee211

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 13-10-2017.

under-1jpg

24. பா மாலிகை (கதம்பம்) ஏழ்மையின் சந்தோசங்கள். (516)

elmaijin santhosam

*

ஏழ்மையின் சந்தோசங்கள்.

*
இயற்கை ஆர்வமுடன் ஓயாத முயற்சியின்
பயிற்சியால் நிறையுணவு ஏழையின் மகிழ்வு.
உறவுகளோடு உயர்வாகப் பகிர்ந்துண்டு மகிழ்வார்.
முயற்சியின்மை, சோம்பலே பெரும் ஏழைமை.
*
உப்புக் கஞ்சி குடித்தாலும் சொந்த
உற்றாரோடு  உண்மையாய்ப் பரிவாய் நடந்து
உணர்வு பூர்வமாய்த் துன்பத்தில் பங்கெடுத்து
உடனிருத்தல், உதவுதல்  ஏழ்மையின் சந்தோசங்கள்.
*
அகலாத நோயின்றி வாழ்தல், நாளும்
அமைதியாய்க் கூலி வேலை கிடைத்தல்
அறுசுவை உணவு வேண்டாம் தினம்
அசைந்திட உணவு பெறுதலே மகிழ்வு.
*
வெறுமையை உணரும் ஏழை அன்புச்
செறிவான வார்த்தைகளில் அமிழ்ந்து மகிழ்வான்.
கிழிந்த ஆடைக்கு மாற்று ஆடை
கிடைத்தால் பட்டாடை பெற்ற மகிழ்வடைவான்.
*
திரைப்பட நடிகர்களிற்கு ஊற்றும் பாலை
இரையில்லா ஏழைக்குக் கொடுத்தால் மகிழ்வார்கள்.
இருப்போர் இல்லாதோருக்குக் கொடுத்தால்  இருசாராருக்குமின்பமே. வறியவன் பொருள் பெற்றால் பெறுமுணர்வின்பம்.
*
ஓலைக் குடிசையை ஒழுங்காய்ப் பராமரிக்கும்
ஓளி மிகு எளிமை மாடமாளிகையின்றி
ஒருமித்து வாழும் குணத்தில் மகிழ்வார்.
ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாய் வாழ்தலே ஏழ்மையின் சந்தோசங்கள்.
*
பெரிய ஆசைகளில்லை இறறைவா எமக்குப்
பொருத்தமானதைத் தருவாய் என்பதே தியானமாய்
விரிக்குமாசையில் வாழ்தலே ஏழ்மையின் சந்தோசங்கள்
*
 
 
 
 24-5-2017

765536nduvjsuirm1