புனிதக் காதல் அத்தமிக்க மனித வாழ்வு சில காணிக்கை. சோலைவன வாழ்வு தர்ப்பணம் பாலைவனமாக்க சுயநிர்ணயம். தியாகம் எனும் திருநாமத்தில் யாகம் சிலர் சுயபாகம். எங்கும் காதலே இது பூமியில். தங்கிய காதலே இது என்றும்
நவீன புரட்சி மலர்ந்தது அதீத எண்ணங்கள் விரிந்தது பொருந்தா ஆடை களைவதாய் பொருந்தும் ஆடை புனைவதாய் ‘ உணர்வுகளைக் கொல்லாதே ‘ ‘ உணர்வுகளை உலவ விடு ‘ இது இவர்கள் காதல் வழி இது இவர்கள் காதல் மொழி
மேற்கத்திய சித்தாந்தம் இது நோக்கம் இவர்களுக்கு இது. காதலுக்காக வளைந்த மனிதம் மனிதனுக்காக வளைத்தான் காதலை தாமிர, வெள்ளி விழாவும் தங்கவிழாவும் சில கூட வரும். எங்கும் இதுவே காதலாக இங்கு இதுவும் காதலாகும்.
ஓங்கும் காதல் தாராளமாக ஏங்கும் இதயங்கள் ஏராளம். கட்டுப்பாடற்றது காதல் நதி கட்டுக்குள் அடங்காத நதி வெட்டிவிட இயலாத நதி முட்டி மோதி நுரைக்கும்நதி சட்டம் எதுவும் பண்ணாநதி சரித்திரமும் படைக்கும் நதி.
துறவற்ற ஓவியத்திரை வானத்தில் பறவைகளின் கொடுப்பனவு வாழ்நிலை இறகினால் அசைக்கும் பயண ஓவியம். யார் தடுப்பாரிதை! சுதந்திர ஓவியம்! தீர்ந்திடாத தூர்ந்திடாத இயற்கை, என் நேர்ப்பாதைக் கவிதை போல.
வளமான தமிழின் வாசனையை வசமாக்கி வகையாக நிரவி வயலாக விதைக்கிறேன் முளைத்திட. அடையாளம் தெலைக்காத வரிகள் தடையேதுமின்றி ஒரு துளியில் இடைவெளியின்றித் துளிர்த்தன பூக்கள்.
இக்காலத்தில் பம்பரம் என்றால் பல வகைகளில் வந்துள்ளன. நமது பேரர் கள் வித விதமாக விளையாடுகிறார்கள். பார்க்க ஆச்சரியமாக உள்ளன. அன்றைய காலத்தில் சோடா மூடிகளுக்கு
நடுவில் துளையிட்டு ஈர்க்குக் குச்சியை நடுவில் சொருகிப் பம்பரமாக உருட்டுவோம்.
சோடா மூடியைச் சப்பட்டையாகத் தட்டியும் அப்படிச் செய்வோம். பம்பரம் உருளும் போது வண்ண மினு மினுக்கும் சொக்கலேட் கடதாசிகளை
நடுவில் ஈர்க்குச்சியில் சொருகி விட்டால் பம்பரம் உருளும் போது அழகாக மின்னும்.கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.
இன்னும் சோடா மூடியில் பல விளையாட்டுகள் செய்யலாம்.
இது தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி.
(இது வேறாகத் தனியானது பிளாஸ்டிக்கில் செய்வது )
தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி. கீழே படத்தில் உள்ளபடி 5வது மாதிரி கையில் பிடித்தபடி ஓடினால் காற்றுக்குச் சுழலும்.படத்தில் உள்ளது போல
தென்னோலையில் செய்து விளையாடும் ஊது குழல்.
இது தவிர தென்னை மாத்தின் இளம் பிஞ்சுக் காய்களைக் குரும்பட்டி என்று கூறுவோம். இதன் மூடிகளைக் கழட்டி விட்டு
இதற்கும் நடுவில் ஈர்க்குக் குச்சியைச் சொருகி பம்பரமாக உருட்டுவோம். இதற்கும் வண்ண சொக்கலேட் கடதாசி உதவும்.
பம்பரம் தவிர இப்படிச் செய்து விளையாடுவோம். நடுவில் இலையையும் வைத்துத் தைப்பது போல பாவனை செய்வோம்.
இதை உருட்டும் சத்தம் தையல் மெசீன் தைப்பது போல, கேட்கும்.
தேர்
தேர் செய்வோம். 5 குரும்பட்டிகள் தேவை. ஈர்க்குக் குச்சிகளை இப்படிச் சொருகி தேர் செய்வது. ஊரில் உள்ளஎனது நட்புகளைக் கேட்டேன். இப்படிச் செய்து
படம் அனுப்ப முடியுமா என்று. அனி விஐய் வவுனியாவில் இருந்துஇதைச் செய்து அனுப்பினார். அவருக்கு மகள் இருக்கிறார் அவருடன் சேர்ந்து இதைச் செய்து படம் எடுத்து அனுப்பினார்.
இவருக்கு மனமார்ந்த நன்றி. இது ஒரு நல்ல பொழுதாக அவர்களுக்கு அமைந்திருக்கும்.
நாம் இதில் கயிறு கட்டி,தேராக இழுத்து பீப்பி நாதஸ்வரம் ஊதி ( அதுவும் பூவரசம் இலையில்)மேளம் தட்டி ஊர்வலம் போனோம். இதில் கூட்டுறவு- ஒற்றுமை – விட்டுக் கொடுப்பு என்று பல சங்கதிகள் பின்னியிருந்தன.
(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில் இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.1)
வெள்ளை நிறம்.
பால் வெள்ளை நிறம் பாப்பா – உந்தன் பல்லும் வெள்ளை நிறம் பாப்பா பஞ்சு வெண்மை நிறம் பாப்பா- உந்தன் பஞ்சு மனதினைப் போலே
மல்லிகை மலர் உனக்குத் தெரியுமா? மனது மயக்கும் வெள்ளை தானே! முல்லை மலர் உனக்குத் தெரியுமா! கொள்ளை அழகு வெள்ளை தானே!
கோழி முட்டை உனக்குத் தெரியுமா! கொக்கு எனும் பறவை தெரியுமா! எல்லாம் வெள்ளை நிறம் தானே! செல்லக் குட்டி உன் மனசுபோலே
வெள்ளை நிறம் அமைதி நிறமாம் வெள்ளைப் புறா சமாதானப் பறவையாம் வெள்ளையில் அழுக்கு விழுந்தால் வெளிச்சமாய்த் தெரிந்து போகும்.
பிள்ளை உன் வெள்ளை மனதிலே புள்ளி அழுக்குப் பட விடாதே!.
(24-4-2000ல் ரிஆர்ரி இலண்டன் ரைம் வானொலியில் சகோதரர்கள் இசங்கீரன் இசையில் சுதா பாடினார். 4-6-2002ல: ரிஆர்ரி கலைக் கதம்பத்தில் வானலையில் என்னால் வாசிக்கப்பட்டது.)