காதல் கனவே கலையாதே —காதலர்தினக் கவிதை
கூதல் தனிமையில் நடுங்காது
சாதல் நினைவை அணைக்காது
நோதல் நிலைக்குத் தள்ளாது
காதல் நினைவே கலையாதே!
00
செப்புச் சிலையே செங்கரும்பே!
ஒப்புவமை இல்லா ஒய்யாரமே!
பிரம்மன் படைப்பில் பிரமையடி
வரமுடை வரமே நீயெனக்கு!
00
ஆண் மனதை ஆட்டிடும்
ஆயிழையே உன்னை ஆராதிப்பேன்!
கள்ளூறும் மலராக மயங்குகிறேன்
உள்ளூற மகிழ்கிறேன் வா!
00
ஆதாம் ஏவாள் அனார்கலி
ஆராதித்த அற்புதக்காதல்
ஆடிப்பெருக்காய்ப் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம்!
00
உறவை உயிராக எண்ணி
உலக வனத்தில் உலாவிட
பறவைகளாய்ப் பரந்து சிறகடிக்க
சிறப்பாய்க் கூடிக் கலப்போம்.
00
வேதா -இலங்காதிலகம் – தென்மார்க் – 13-2-2024