49. (பா மாலிகை ( காதல்) 116.

மதிமலருக்கு இரண்டாவதான காதற் கவிதை)


காதலாற்றுப்படை

கொண்டையில் மலர் சரியச் சரிய
கண்டபடி மனம் அலைய அலைய
வண்டுவிழிகள் எனை இழுக்குதடி
செண்டுப் பாவாகத் தொடுத்திட
பண்டுத் தமிழை மேய்கிறேனடி.
00
கலிங்கத்துப்பரணிக் கடைத்திறப்புப் பகுதியை
நலிவு அற்ற பரணியை
பொலிவுடை ஊடற் பிரிவை
பொருத்தமாய்ப் புரட்டிப் பார்த்து
பொழுது சாயமுன் சந்திப்போம்
00
தமிழாடிக் கவிதையாடிக் காதலாடி
தமிழ்ச் சொற்சுள்ளிகளை அள்ளிப்போடு
அமிழ்ந்திட வரிகளைக் கொழுத்திடு!
அமிர்தமாகட்டும் எமது சந்திப்பு.
அருகில் சேர்ந்து இணைவோம்.



– 20-10-2022