15. சோழா

Vetha Langathilakam

  · 

Public

கண்ணான கண்ணே இனிய பிறந்தநாள்

எட்டும் வரை எட்டு சோழா!!!!!

கிட்ட இருந்து வாழ்த்துவது போல

பட்டுக் கண்ணனை வாழ்த்துகிறோம்.

எல்லா வளமும் நலமும் நிறையட்டும்.

இறையாசி நிறையட்டும் தாத்தி அப்பப்பா

அத்தை குடும்பம் அப்பா எல்லோரும் வாழ்த்துகிறோம்

Happy Bday kanna… 17-9-2022

48. பா மாலிகை ( காதல்) 115. மாமன் மகளே

மாமன் மகளே
00

மாமன் மகளே! மாமதுரைக் குயிலே!
ஏமம் (களிப்பு) தரும் இன்ப வல்லியே
ஓமம் வளர்த்துத் தாலி கட்ட
ஆமென் (அப்படியே ஆகுக) கூறி எப்போது சிரிப்பாய்!
காமன் பண்டிகைக்குக் கூடுவோமா கண்ணே!
00
தாமன் (சூரியன்) சாயுமுன் வெற்றிலை பறித்து
தாயாரிடம் சேர்த்திட்டால் வாணிபம் உயரும்.
பூமகள் நீயும் பூக்கடையைப் பார்த்திடு!
மாமணிச்செண்டே மேம்படும் பணமுடை!
கோமகன் கோமகளாய் மணமேடை ஏறுவோம்.
00
– 29-3-2022

7.  நான் பெற்ற பட்டங்கள்

இது எனக்கு 2வது பாரதி விருது. குழுவிற்கு மனமார்ந்த நன்றி
00

சிந்து நதியின்மிசை நிலவினிலே….
00
(மதி –பகுத்தறிவு. அசை-செய்யுள் உறுப்பு. விசை –வெற்றி.
நசை –நம்பிக்கை. )

00
முந்தி மதியில் கேட்ட இசை
அந்தி பகலாய் இரசிக்கும் அசை
உந்திய ஊஞ்சலில் ஊன்றிய விசை
கெந்திப் பாடிய கெடுமதியற்ற நசை
சிந்து நதியின்மிசை நிலவினிலே ஓசை
00
சிந்தையில் குந்திப் பந்தியிடும் சந்தத்தை
செந்தமிழப்; பெண்மை சுதந்திர உணர்வை
சுந்தரக் குழந்தைக்கு ஓடி விளையாடிட
மந்திர வரிகளை வீரமாக்கிய மகாவித்தகன்
அந்தம் வரை தமிழ்ச் சாரதியே!
00
வேதா.இலங்காதிலகம் – தென்மார்க் -24- 9-2022

சிறுவர் பாடல்கள்.

6 பால் அப்பம்
00

கிட்ட வந்த நிலவாம்
வட்ட வட்ட அப்பம ;
தொட்டுத் தொட்டு ருசிக்கும்
கட்டிப் பால் அப்பம்.
00
முறுகலான கரைகளைப் பிய்த்து
முங்கிப் பாலோடு ருசித்தால்
முழுதான பால் அப்பம்
மிகச் சுவையாக இனித்திடும்
00
அம்மா சுட்ட அப்பம்
அத்தை சுட்ட அப்பம்
பாட்டி சுட்ட அப்பம்
பலவகையாய் இனிக்கும்.
00

வேதா. இலஙகாதிலகம்
(ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியை )
டென்மார்க்—11-8-2021
00

154. சான்றிதழ்கள் – கவிதைகள் 151 அருந்தமிழே! ஆரமுதே!

Anna Durai is with Arivukkan Raju Naidu and

96 others

.

Admin

Group expert

August 18 at 1:53 PM •

14.08.22ல்

நிறைவுற்ற

அருந்தமிழே ஆராமுதே

கவிதைப் போட்டியின் வெற்றிப் பாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதில் குழுமம் மிகவும் மகிழ்கிறது

வாழ்த்துகள்

பாவலர்களே

அருந்தமிழ்க் கவிக்கூடம்

கவிதைத் தலைப்பு

00

அருந்தமிழே! ஆரமுதே!

00

பெருஞ்சிறப்பாய்ப்; பெருந்தகைமை பெருக்கம் தருவதே

மருந்தாகும் எம் மனக்கவலைக்குச் செழுந்தமிழே!

வருந்தாது இலக்கியங்கள் வளமாக வாசித்தலே

திருந்திடத் தெளிவாக விருந்தாக எழுதலாமே

அருந்தமிழே ஆரமுதே என்னுயிர் நீயே!

00

ஐம்பெருங்காப்பியம் ஐந்தெழுத்து ஐங்குறு நூறாம்

ஐயப்பாடற்ற சங்கத்தொகை பொதிகைப் பேரொளி!

ஐந்திலக்கணத் தமிழ் புறந்தள்ளிடாப் புதையலே!

தொன்மை மொழியெம் குறுமுனித் தமி;ழே!

குமரிக்கண்டத்தால் முச்சங்கமேறிய முத்தமிழே எம்மியக்கமே!

00

வேதா.இலங்காதிலகம் – தென்மார்க் – 12-8-2022