*
காதலில் கருக்கொண்ட காப்பியங்கள்.
*
சிலம்பு + அதிகாரம் சித்தியடையாக் காவியம்
கலம்பகம், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
சலங்கையோசையில் கவனம் குலைந்த கோவலன்
அலங்கோலமாகிய துன்பியல் இன்பியல் காப்பியம்.
*
குண்டலகேசி, திருடன் காளன் காதலோவியம்.
கண்டதும் காதல் திருமணம், கணவன்
கண்டபடி திருட, கண்டிப்பு மனைவியால்.
கண்டித்தவளைக் கொல்ல எண்ணியவனைக் கொன்றாள்.
அண்டுமாசையே துன்பக் காரணியென்னும் காப்பியம்.
*
ஒருவரைக் காணாது ஒருவர் காதலித்த
இருவர் ‘ நளன் தமயந்தி ‘ துணைக்கதையாம்
வருவது மகாபாரதத்தில், அன்னத்தூது சிறப்புடைத்தாய்ப்
பெரும் துன்பப் படிப்பினைக் காப்பியம்.
*
அம்பை, சௌபல நாட்டு சால்வனின்
செம்பாகக் காதலின் தோல்வியால், தேவவிரதனை
அம்புப் படுக்கையில் இட்டது பழிவாங்கல்.
தெம்புடை மகாபாரதத்தில் பல காதல்.
*
அரியாசனக் காதலால் சகுனியோடு இணைந்த
துரியோதனாதியரின் பதவிக் காதலால் ஒரு
உரிமைப் போரான காப்பியம் மகாபாரதம்.
உயிரை உருக்கி ஊக்குவிக்கும் காதற்
பயிரின்றேல் ஓவியம், காவியம், காப்பியமேது!
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 10-5-2018
*