*
Poongavanam Ravendranதமிழமுது கவிச்சாரல்
· 10 March ·
இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்
கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்…
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 7–3–17 நாளாம் போட்டி கவிதையின்
♥#தலைப்பு__#இலக்கணத்தில_வல்லினம்_காணவில்லையாம்_எடுத்து_சென்றாயோ_நீ_ஏதும் தொடரவும்
வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*
தலைப்பு:- இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்….
இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்
அன்றி துலக்குவாயோ அழகாக
மூன்று இன எழுத்துகளறிவாயா!
கசடதபற – வல்லினம் கட்டுவாயா!
ஙஞணநமன – மெல்லினமா ! அன்றி
யர லவழள – இடையினமா சொல்!
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இது.
இது எம்மொழி நம்மொழி.
வல்லொலிகள் கொண்ட மெய்யெழுத்து.
வல்லினமும் உயிரெழுத்தும் சேர்ந்து
நல்ல தமிழ் உருவாகும்.
வல்லினத்தை மெல்லினம் திருடுமா!
வலிமை போதாதிருக்கலாம் அன்றோ!
வல்லினம் இடையினத்தில் ஒளிந்திருக்க
நல்ல வாய்ப்புண்டு காமமிகுந்தால்.
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவில்
வல்லினம் மிகாது. அத்தனை,
இத்தனை, எத்தனையிலும் மிகாது.
அஃறிணைப் பன்மையிலும் மிகாது.
எட்டு பத்து தவிர
மற்றைய எண்கள் பெயர்
பின் வரும் வல்லினம்
மிகாது என சிறிதறிவோம்.
*
7-3-2017 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
*