31. பாமாலிகை – (தமிழ்மொழி) 78. ஒளவை பண்பாடோதினார்

ஒளவை பண்பாடோதினார்
00

கணக்கெடுக்காமல் கருத்தில் கொள்ளாமல்
இணக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள்
உணரார் உணர்ச்சியாக எழுதுவதை
கணக்கிட முடியாது அலட்சியங்களை
00
இருப்பையே காட்டும் விருப்பு
கருத்தா மன எண்ணமா
உருத்துடன் அதைக்காட்டி விடு
அருத்தமாகப் பேசிடு எழுதிடு!
00
தொலைவில் வானம் குடையாகிறது
அலையும் அலைகள் ஆடைகளாகிறது.
தலைமை தாங்க வேண்டும்
விலையற்றதான வித்துவ வரிகள்
00
வள்ளுவர் அழகு படுத்திய
வள்ளல் மொழிக்கு ஒளவை
கள்ளமறப் பிள்ளைகள் வளர
உள்ளம் கவரும் பண்பாடோதினார்.
00
கருத்தோடு வாசி மனங்கள்
திருந்தி மாசறு திருவினையாக்கலாம்
முருகுடை ஊட்டமிகு உணர்வுகள்
பெருகட்டும் திறமையாய்க் காட்டாறாய்!

00
1-8-2022