15. பாமாலிகை (எழுத்து – தொடர்) 15

எழுத்து. 15

நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

நதியில் விழும் பிம்பமும்அல்ல
நதியில் விழும் இறகும் அல்ல
குதிக்கும் தமிழில்; குளித்து எழுந்து
பதிக்கும் நுண்ணிய தமிழ் முத்தம்.
உதிக்கும் எண்ண விதைகள் வரமேந்தி
மதித்துப் போற்றும் நம்பிக்கை நிறைத்து
நதியின் நீல நெளிவின் ஒக்கலையில்
முதிர் பாறையாய் அமர்வது எழுத்து.

உரைக்கும் எழுத்தாம் தமிழ் ஸ்பரிசம்
கரைக்கு வரும் அலையின் ஸ்பரிசம்.
நுரை நுரையாம் வெண்மைத் தமிழ்.
வரை வரையாகத் தினம் முத்திக்கிறது.
தரையில் எத்தனை எத்தனை இரசவாதம்.
இரையாக்குகிறது மனிதரின் பயனான நேரம்.
அரைக்கும் சந்தனமாய் மின்னும் ஒளிர்வாய்.
அரையிருள் முழுநிலவு என்று ஆகிறது.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்

நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 22-2-2022

எழுத்து. 15

14- பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து – 14

எழுத்து – 14

எழுத்துக்களின் சேர்க்கையில் எண்ணிக்கை அற்ற
விழுப்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
எழத்து அறிவற்றவனுக்கது சிதம்பர சக்கரம்
எழுத்தை  அறிந்தவனுக்கது இவ்வுலக சுவர்க்கம்.
பார்வை அற்றவனுக்கும் மொழி உண்டு.
எண்ணத்தின் உயிர்ப்பு எழுத்து, கையெழுத்து
எழுத்தின் இதம் ஆர்ப்பரிப்பை அடக்கும்
அழுத்தி அலையும் மனதை அமைதியாக்கும்.

எழுத்து யாகம், பூசனை ஓமகுண்டம்
அம்மா என்பது மூன்று எழத்து
அடி என்பது இரண்டு எழுத்து
வா என்பது ஒரு எழத்து
எழுத்து ஒரு பிரமிப்பு! சுவாசம்
எழுத்து வேளாண்மை ஒரு ஆயதமுமாகும்
திறமையெனும் ஞானச்சாவி கொண்டு எழுதலாம்.
பன்முகக் கூறுடைய எழுத்தே திருவள்ளுவம்.

அன்றாடநெறி ஆன்மீக அறம் நிறைத்து
ஈரடியில் உலகத் தத்துவம் கூறுவது.
தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை மொழி
என்பதால் எழுத்து கருவி ஆகிறது
எல்லா மலர்களும்  கண் வைப்போரை
கொல்லும் அழகால் வளைப்பது போல
வல்லமை எழுத்தும் ரசனைத் தேனாம்
வெல்லும் அறிவைப் பரிமாறுவது உண்மை

2.-10-2019

https://www.vallamai.com/?p=94983

https://www.vallamai.com/?p=94983

13. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து – 13

 எழுத்து – 13

என்னுள் குமிழியிடும் திமிர் எழுத்து.
தென்றலும் வெட்கத்தோடு தாண்டி நடந்தது.
நெஞ்சத் தண்டவாளத்தில் எழுத்து ரயில்
நெடுந்துயிலின்றுp கவனமாக ஓடுகிறது
மூங்கிலில் மறைந்த புல்லாங்குழலாக
மேகத்துள் முடிந்த மழையாகத்
தாகமாக ஓடுகிறது என்னுள்ளே எழுத்து
மோகமாக இதைக் கவிதை ஆக்குகிறேன்.

தமிழில் முழமையான பழைய இலக்கண
நூல் தொல்காப்பியமே! முழவதும் படித்திட
நிழலும் எனக்குத் தடை இடாது
விழவிடாத கருவியே எழுத்தும் எழுத்தாணியும்.
எழுத்து, சொல், பொருளாம் மூவிலக்கண
முழு இலக்கணமும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
எழத்து இலக்கணம் இரு வகையான
முதல் எழத்து சார்பு எழுத்தாம்.

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லாம்
நல்ல பாரதியாரின் ஒரு கூற்று.
எ – உச்சரிப்பைக் காதால் கேட்கிறோம்
எ யை கண்ணால் விழிக்க எழுதுகிறோம்.
உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தாகி
வல்லினம், மெல்லினம் இடையினமும் ஆகும்
முதல், கடை, ஈற்று கூட்டெழுத்தாகும்
சொல்வளம் எழுதினால் பெரும் கட்டுரையாகும்.

25-9-2019

https://www.vallamai.com/?p=94676

12. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து -12

எழுத்து -12

குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது(தூய்மை)
கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
கேளடி என்று பல கேள்விகள்
தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
மேலடி தான் இதன் முடிவாகும்.

கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்
கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!

பாலும் பலாப்பழமும் பாகும் தேனும்
மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.

24-9-2019

11. பாமாலிகை (எழுத்து – தொடர்) –

எழுத்து -11

சிந்திக்கும் என் சுதந்திரம் என்றும்
நந்தவன மலர்களில் தேனருந்த அலைந்து
சிந்து பாடும் தேனீயாக உலவும்!
மந்திரமாய் உயர்வாய் மலைத்திட எழுத
செந்தமிழ்ச் சதுரங்கம் ஆடும். சங்கொலி
முந்தி வரட்டும் என்  தமிழுக்கு
முந்திய மூன்று சங்கங்களின் இருப்பும்
தந்தது  இந்த எழுத்து தானே!

என் சொற்காலம் இப்படித்தான் நிலவட்டும்!
என் கவிச்சிறகுகள் இப்படித்தான் விரவட்டும்!
மீன்களாகக் கண்ணாடிக்குள் வண்ணமாக அல்ல
மீளாது ஓடிடும் ஆற்றின் மீன்களாய்
கீழாகவோடி அழியாது சரித்திரம் படைக்கட்டும்!
என் விரல்கள் எப்போதும் பேசட்டும்!
மென் அலங்கார வார்த்தை இரசனையிலல்ல
இன்னமுதத் தகவலோடு இனிமையாய்ப் பரவட்டும்!

நாலெழுத்துத் திறமையோடு சபை நடுவே
நீட்டோலை வாசிக்காதவனே மரமென்றார் ஒளவையார்
வல்லமையாய் எழுத்தில் மேன்மை தேடுதல்
வில்லேந்தும் வீரமாக அகலவியலாத அறிவாகும்.
மெல்லிய மலர் மஞ்சமாக மனதில்
தொல்காப்பியம் விரிக்கும் அகளங்கம் இன்றி
புல்லறிவு விரட்டி தமிழினிமை கொள்ளல்
அல்லிக் குளத்தருகே முல்லை மல்லிகையனுபவமாகும்.

https://www.vallamai.com/?p=93859

Print Friendly, PDF & Email

10. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து

எழுத்து

பழுதற்ற பவுத்திர வரிகள் தான்!
உழுது உலகையெழுப்பும் வரிகள் தான்!
எழுது! எழுது! எழுத்து வாசிக்கப்படுகிறதா!
எழுதுவது யாரெனப் பார்ப்பதே தோல்வி
உழுத்த சிபாரிசு பேதம் பார்த்தல்
எழுத்தைக் காட்டினுள் வேகமாய்த் தள்ளுது.
எழுத்திற்கு வயதில்லை பிறகு ஏன்
எழுதுபவன் இளமையாஇ முதுமையாவென ஒப்பீடு!

தொழுதிடும் வரிகள் நேர்த்தியைப் பார்!
வழுவற்ற வரிகளா! கம்பன் பாரதியின்
விழுதுகளா என்று தமிழைப் பார்!
கழுவி ஊற்றாதே கருத்துடை எழுத்துகளை!
எழுத்து நான்கு வயதிலொரு கூறு
எழுமையாம் நாற்பது வயதிலொரு கூறு.
எல்லாமே இனிமை இல்லையது சேறு.
வல்லமையோடு வாரியெடு இது ஆறு!

வாரியிறைக்க குளம் குட்டையல்ல
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
நல்ல எழுத்து தலைநிமிர்ந்து நிற்கும்
அல்லல் செய்யும் கரகாட்டத் தினவெடுப்பு
நில்லாது எழுத்தாணி எழுதி வடித்திடும்
நெல்லாக விளைந்து நூலாகி உருவெடுக்கும்.

2019 october

9. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து

எழுத்து 9

ரங்கராட்டினமாய் மனதில் தினம் கட்டமிடும்
சதுரங்க ஆட்டம் தான் எழுத்தும்.
மதுரமான மூளை சார்ந்த தந்திரமும்
மதுரச மதியூகக் கலை அறிவியல்.
கிடையாகவும் செங்குத்தாகவும் எழுத்துக்கள் நகர்த்தி
குதிரைஇ ராசாஇ ராணி மந்திரிகளுடன்
காய்களை அசைத்துத் தமிழ்க் கோட்டையேறும்
ஐம்புலன் அறிவுச் செல்வம் தமிழ்.

சீவனில் மலர்ந்த எழுத்து வற்றாத
சீவ நதி…மாறாத முற்றத்து மணல்
சீர் செய்து கலைத்துக் குவித்தல் போல
சீண்டிக் குலைத்து திரும்பக் கட்டும்
சீரிய பணியே எழுத்து. மாந்தர்
சீர்ப்பாட்டில் நாளானாலும் நழுவிடாது எழுத்து.
சீலமுடை எழுத்து மகா சமுத்திரம்.
பாலமிடுங்கள் பண்புடன் பாதுகாக்க! எம்முயிர்!

எங்கு விழுந்தாலும் நதி தன்
பங்கில் வழி கண்டு கடல் சேர்தல் போல
மங்காத எழுத்துமதன் வழி காணும்.
பொங்கும் எழுத்தால் ஏறும் வாசனைத்
திரவியம் மழைக்காலத் தேநீரின் கதகதப்பாய்
அரவணைத்தல் அலங்கார உற்சவ அனுபவமே!
அரவிந்தத் தமிழை தாலியின்றி மனது
கரவின்றிச் செய்த புனிதத் திருமணமிது

மனமெனும் அடர்வனத்துள் ஒளி பாய்ச்சும்
இனமறியா கதிர்வீச்சே! அறிவை மெல்லிசையாய்இ
கனமழையாய் சுரம் பாட வைப்பாய்!
தனமாய் விரிந்த உள்ளங்கையாய் இருப்பாய்!
கனமென்று யாராலும் ஒளித்திடவியலாத எழுத்து (அறிவு)
தினமாய் செவிகாள் கேண்மின்களே! கற்கண்டினம்!
மனம் இனிக்க கண்காள் காண்மின்களே!
வனமெனும் வார்த்தை விண்மீன் தடாகமுலகம்.

12-11-2018

https://www.vallamai.com/?p=89179

8 பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து

எழுத்து – 8

அக்கினியும் அக்கிரமமும் தாங்கவியலாது விசிறலாம்.
அற்புதமும் ஆனந்தமும் ஓங்கிடப் பாவெழுதலாம்.
உக்கிரமாய் சிலர் தனித்தமிழ் தமிழென
அக்கறையாய்க் குரலெழுப்புகிறார்! எத்தனை மொழிகளோடு
முக்குளித்த தமிழ் எழுத்துகளைப் பிரிக்கவியலுமா!
பரிபூரணமாய் மூச்சிலும் பேச்சிலும் பின்னிப்
பிணைந்ததை வேறு வேறாக்கல் அசாத்தியம்.
இணைந்த கலப்பு எழுத்தாகவே எழுதுகிறோம்.

வடமொழித் தழுவலின்றி முதற் காப்பியமாய்
இடம் பெற்ற பெருமை சிலப்பதிகாரத்திற்காம்.
வடம் பிடிக்குமென் தூரிகைக்குள் கடல்
வானம் என்று ஆச்சரியங்கள் பலவுண்டு.
தேங்கி நிற்கும் சிந்தனை வெள்ளம்
பாங்காகக் காகிதப் பள்ளத்தில் பாய
ஓங்கிய தேசமெனும் நதிக்கரையில் படகோட்டி
ஓங்கிடுமென் எழுத்து தமிழ் உல்லாசபுரியில்

வெற்று மண்ணில் பிறந்தேன் இன்று
வெற்றியில் பயணிக்கிறேன் தமிழ் வயலில்
சுற்றும் குதிரைச் சவாரி இது
பற்றறுத்து வெட்ட முடியாத தமிழ்
அற்பமல்ல! வீரியச் சிறகுடைய பாரம்பரியம்.
வெற்றுக் கல் அல்ல! பிரமாண்டக்
கற்பாறை! நாளும் செதுக்குகிறேன் சிற்பம்.
அற்புதம்! அனந்தம்! அவசியம்! அனுகூலம்!

யற்கையெனும் பச்சையங்களில் நீந்தி இன்ப
மயற்கையில் எழுத்துப் பூ மலரும்
வயற்காட்டுத் தமிழரசி யான்! கவிதை
முயற்கொம்பல்ல! நாளும் சுவாசிக்கும் பூப்பாத்தி.
வியத்தகு வெண்மாளிகையில் முத்துக்களாய் உருளும்
நயமிகு ஆர்மோனிய இசையாய் தவழும்
கயமையாய்த் திமிறியும் நழுவும் எழுத்தை
சுயமாய் பொறுமையாய் கட்டி இழுப்பேன்.

30-8-2018

7. பாமாலிகை (தமிழ் மொழி) எழுத்து- 7

எழுத்து – 7

புலன்நுகர் எழுத்தெனும் விண்மீன் விதை
பலன் கருதி விழுந்து முளைத்து
நிலவாகி ஒளிரும்! எனதென்று மொழிந்தாலும்
வலங்கொள்ளுதல் உலகிற்காகவே என்பதுண்மை!
பலமுடை எழுத்துமொரு தீவிரவாதமே! துணிவுச்
சாராயம் அருந்தியவன் அச்சம் தெரியாமல்
ஊராண்மை செய்வான்! வாள் வீச்சாகவும்
தாராட்டும் தென்றலாகவுமவன்; தூரிகை சாமரமாகும்

பெருந்தெருவோ ஒற்றையடிப்பாதையோ எதுவானாலும் தானே
உருவாக்கி எழுத்துலா அமைப்பான். மண்ணிலடித்து
அரூபமாய்ப் பேரலை பிரமாணமிடுதல் போல
உருவம் தருகிறது மீண்டும் மீண்டுமெழுத்து
முருகு! மூழ்கும் பரிமாணமல்ல எழுத்து!
வண்ணத்திப் பூச்சிச் சிதறல், பூவனம்,
கண்ணிறையும் பெருமரத் தோப்பு, தவழுமலை
எண்ணிறைந்தவை எழுத்துறங்கும் இரகசியப் பொறிகள்.

சிற்பக்காடு, மூங்கில் வலயம், மைமல்,
அற்புதம் சமைக்கும் மழை வானம்,
பொற்புடை சோலை, மலர் பந்தல்
உற்சாகம் உற்பத்தியாக்கும் ஆனந்தத் தென்றல்,
அற்றைப் பொழுது மழைத்தூறலின்
சொக்கும் மண்ணின் மணம், கடையிடும்
பூக்கள் அனைத்தும் இதழ்கள் விரித்து
பாக்கள் உற்பத்திக்கும் ஊற்றுப் புதையல்.

தூக்கம் விழித்து இயற்கையில் மிதந்து
பா கட்ட வைக்கும் மனமெனும்
மொட்டை விரிக்கும் எழுத்தாய் விழுந்திட
நித்திரை மரமேன் ஏற வேண்டும்!
பத்துவித பணிகளேன் செய்ய வேண்டும்!
எழுத்தென எழுதிக் கொண்டேயிருந்தால் என்ன!
தமிழ் மேகங்கள் பொங்கும் மனவானம்
வெறுமையின்றி வார்த்தைகள் வெடி கொளுத்தலாமே!

28-6-2018