என்ற தலைப்பில் 12 அங்கங்கள் எனது இணையத்தளமான வேதாவின் வலையில் எழுதியுள்ளேன். ( https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B/) இரண்டாவது வலையாக இங்கு வேதாவின் வலை.2 ல் 13வது அங்கமாக இதைத் தொடருகிறேன். இலங்கையில் கலவர பூமியான கழுத்துறை மாவட்டத்தில் சிங்களம் பிரதான மொழியான இடத்தில் நான் திருமணமாகி வாழ்வைத் தொடர்ந்தேன். என்ன கதை சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்ப்பா!…இல்லை…..இல்லை….ஐந்தூரியம் மலர்கள் நினைவு வந்தது. எனது தோட்டக்கலை அனுபவங்களை எழுதலாம் என்ற சிந்தனை என்னைத் தூண்டியது. அழகிய தேயிலைத் தோட்ட வாழ்வு 750 ஏக்கர் நிலப்பரப்பில் நடுவிலொரு சிறு வீடு இரு படுக்கையறைகள், இருக்கையறை, சமையலறை சுற்றிவர தோட்டம். இயற்கை மழையால் பூக்கன்றுகளிற்கு நீர் விடத் தேவையற்ற சுவாத்தியம். வீட்டிற்குத் தேவையான சமையல் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை.
பொன்னாங்காணி, பசளி கீரை, சிறுகீரை, வல்லாரை மழை பெய்தால் தானாகவே வளரும்.
இதே போல முருங்கை மரக் கீரை, முருங்கைக் காய் என்றும் தானாக வளர்ந்த மரங்கள்.
கறிவேப்பிலை மரமாகவும் இருந்தது. தோட்டமாகச் செய்து கத்தரிக்காய், போஞ்சி, பச்சை மிளகாய், வட்டுக் கத்தரிக்காய் என்பன கிடைத்தன.
சட்டிக்கரணைக் கிழங்கு கிடைத்தது. இதன் கீரையையும் சமைக்கலாம் குருத்தான இலையாக.
இராசவள்ளிக் கிழங்கும் உருவாக்கினோம்.
மரவள்ளிக் கிழங்கு வேண்டிய அளவு வளர்ந்தது. மரவள்ளிக் கீரையும் சமையலுக்குப் பாவிப்போம். மரவள்ளியையும் பல மாதிரிச் சமைத்து உணவாக்க முடியும்.
ஈரப்பலா க் காய் – மரம் ஒன்று பெரிதாக இருந்தது . அதன் காலத்தில் இந்தக் காய்களை கறி சமைக்கப் பாவிப்போம். ஒல்லாந்தர் கொண்டு வந்து ஊன்றிய மரமாம் -இதன் படம் கீழே உள்ளது
இத போல பலா மரமும் இருந்தது; பலாக்காய் கறி செய்ய – பழம் உண்ணப் பாவிப்போம். –இதன் படம் கீழே உள்ளது.
பசியால் வாடும் ஏழை களவாணிப் பயல்கள், குடித்து விட்டுக் கூத்தாடுவோரும் , இரவில் இதை களவாகவும் பிடுங்கிப் போவார்கள்.
(இத்தனையும் பணம் கொடுத்து வாங்கி உண்ணும் காலம் இது. இலவசமாக இவைகளை அன்று பெற்ற காலம். நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு வாழ்வு அன்று ஆண்டவனுக்கு நன்றி.)
எங்கள் செல்லப் பேரன் தங்கக் கட்டி இராசன் இங்கு மூன்று வயதாகிறான் பொங்கும் மங்கள வாழ்த்துகள்! திலீபன் சாந்தியின் அரும் திலகம் தினகரன் ‘ சோழன் ‘ உலவி நிறைகிறார் இன்று கலகலப்பான மூன்றாம் ஆண்டு. சுட்டியாக மும்மொழி பேசுகிறார். கெட்டிக்காரச் செல்வன் எங்கள் கட்டி வராகன் சோழாவே! கொட்டுமமுதத் தேன் துளியே! அச்சுப் பிச்சு மழலையால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் மெச்சும் கதைகள் கூறுவார் உச்ச ” ஸ்பைடர் மான் ” ரசிகர். வாகனப் பிரியர், ஓவியர் வாக்குநயமுடைய அண்ணாவும் அப்படியே! வாரப்பாடாய் வெற்றியோடு விளையாடுவார். வாழ்க நீடு! வளர்க!
அப்பப்பா-தாத்தி- பிரித்தானியா லா அத்தை-மாமா 17-9-2017
சோழா ஆடும் குதிரையில்
சோழா ஆடும் குதிரையில்
மயக்கும் மாதவன்கள் 00
(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_) 00 பேரர்கள் பின்னும் வாழ்வு ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு. ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு. ஆரணனான குமிண் சிரிப்பால் 00 கன்னக் கதுப்பு மின்ன கருத்துக் கவரும் சின்னக் கண்ணன்கள் எங்கள் தங்கங்கள். என்ன பொருளும் இணையாகுமோ! 00 இதழ்கள் சொல்கின்ற கவிதை இதயம் கவரும் பாவிதை இதுதானே மயக்கும் இன்பம் இணைவதும் அறிவின் இனிமை. 00 வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022
அன்றைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்வில் குடும்பங்கள் மகிழ்ந்தன. அதன் மகிமையை அறிந்த பல ஐரோப்பியர்கள் இன்று பெற்றோருடன் அல்லது மாமா மாமியுடன் சேர்ந்து வாழ்வதை விரும்புகின்றனர்.
டென்மார்க்கில் நான் கண்ட உண்மை. இது பழையவர் நிலை.
திருமணமாகிய தம்பதிகளிற்குள் உள்ள பிரச்சனைகளில் தமிழர்களுள் மிகவும் சுயநலம் நிறைந்து காணப்படுகிறது.
மனைவி தனது சகோதரர்கள் பெற்றோருடன் நன்கு உறவாடும் போது கணவன் தனது சகோதரங்களுடன், பெற்றோருடன் உறவாட கணவனுக்கு அனுமதி மறுக்கிறாள். முறைத்துக் கொண்டு முரண்படுகிறாள். தானும் உறவாடுவதில்லை.
இது பல குடும்பங்களில் கணவன் மனைவி உறவிற்குள் முரண்பாடுகள் உருவாக்குகிறது.
எந்த மாமியாரைச் சந்தித்தாலும் அவள் பெரிய மோசம். எங்களுடன் மகனைச் சேர விடுகிறாளில்லை என்று வேதனைப் படுகிறார்கள்.
இந்தத் தம்பதிகளின் வாரிசுகள் எப்படி உலகோடு ஒத்து வாழ்வார்கள். உறவுகளைப் பிரித்து சேராத வாழ்வு முறையைத் தமது வாரிசுகளிற்கும் காட்டிக் கொடுக்கும் கொடுமையை என்ன சொல்வது.