பிரபலங்கள்..
ஈரோடு தமிழன்பன்
மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதையோடு நான்
00
சென்னிமலை செகதீசனாம் தமிழன்பனின்
உன்னதமான தமிழ் உச்சரிப்பு
சென்னைத் தொலைக்காட்சி தூரதர்சனில்
இன்னமுதமான செய்திப் பரிமாறலானது
பாரதிதாசனின் பற்றினால் கவிதையை
ஆராதித்துக் கன்னற் கவிச்செங்கோலோச்சினார்
வேரதுவரை ஊன்றி அகலமாகப்
போதையுடன் மகா போதைகொண்டார்.
00
தமிழ், புத்தகம், கவிதையில்
அமிழ்ந்து சாரலில் நனைந்தார்
தமிழ்நாடு அறிவியற் தமிழ்மன்ற உறுப்பினரானார்
எதுகை மோனை வேலியைத் தவிர்த்துப்
புதுக்கவிதைப் படலை திறந்தார்.
கவியரங்கத்தில் மத்திய அரசை
அச்சுறுத்தும் விதத்தில் கவிதை
வாசித்ததால் செய்தித்துறையிலிருந்து தவிர்க்கப்பட்டார்
00
கவியரங்க மேடைகளைப் புதுப்பித்தார்.
அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களாக்கினார்.
சாகித்திய அகடாமி விருதுபெற்றார்
வாசித்து வாசித்து மனதின்
பாசிப்படை விலகித் தூசிகளைக் கரையொதுக்கிய
சிந்தனையாளர் ‘ ஈரோடு தமழன்பன் கவிதை இன்பததில் ‘
நானும் நனைந்தேன் கவிதைஇ தமிழ் புத்தகமாக.
‘ உண்ட நிறைவின் அடையாளம் ஏப்பமாக இருக்கும்
எனில் புத்தகம் படித்த நிறைவின் அடையாளம்
எழுகிற சிந்தனையாக இருக்க வேண்டும் ‘
என்று வரிகள் எழுதியுள்ளார். சிறப்பு.
கசடற – ஐயம் திரிபுற கற்பது புத்தகத்தால் நிகழ வேண்டும்.
வாசிப்புவாசம் இதமானது .ஆனந்தவாசியாக்குகிறது.
எவ்வளவு வாசியான நிலைமை அது!
உன்னை மறப்பாய்! உலகை அளப்பாய்!
ஊற்றான அறிவால் உண்மை உணர்வாய்!
‘ கை விரல்களுக்கு மோதிரம் போல அல்ல
கைக்கு விரல்கள் போலப் புத்தகங்கள் பிரிவதில்லை ‘
என்கிறார். ஈரோடு தமிழன்பன். ….ஆம்…..
வாத்தியாராகும் இன்பதுன்பம் நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவப்பாடம் கோத்திடும் மனப் பக்குவம்.
பூவெனப் பயன்பாடு பூக்கும் பூவாசமதிப்புப் பெருகும்
பூரண மகிழ்வு மலரும் பூசிடும் செழுமை வாசிப்பால்.
00
வாசித்தாலும் பயமின்றி எழுதத் துணிவு வேண்டும்.
சுயசரிதைஇ சுயநாட்குறிப்பும் நயமுடை வரலாறு பதிக்கும்.
எல்லாவற்றையும் எல்லோரும் எழுதுவார்களா!
வெல்லமாய்க் கரைந்தினிக்கும் புத்தகமாய்
மெல்லக் கதை வெளியாகி வென்றிடுமா
வாழ்க்கை நூலகத்தில்.! நவரசங்கள்இ
பள்ளங்கள்இ சிகரங்கள் தவமுடை வாழ்வில் இயற்கை
துவண்டிடாது தடை தாண்டினால் உவப்புடை உயரமெட்டலாம்.
00
வீணாக நேரத்தைச் செலவளிக்காது ஏற்ற நேரங்களில் நல்ல நூலைப் படிக்க வேண்டும்
‘ எப்போதும் படித்துக்கொண்டிருப்பது தப்பென்றால்
எப்போதாவது படிக்கலாம் என்றிருப்பது அதைவிடத் தப்பு ‘
என்று ஐயா எழுதுகிறார்.
புத்தகம் அறிவுப் பொக்கிசம். அறிவுக்கு எல்லையில்லை. ஆயுள் முடிவு வரை கற்கலாம். அதனால் தான்
‘ புத்தகத்தைப் படித்துக் கிழிப்பது குற்றம்: படிக்காமல் கிழிப்பதும் குற்றம்:
இவற்றை விடப் புததகத்தைப் படிக்காமலே வைத்திருப்பது
பெரிய குற்றம் ‘ என்கிறார் பெரியார் தமிழன்பன்.
00
தமிழில் ஈரமாகிக் கருத்தை அலச வேண்டும். கருத்துச் சிறகு தளர்ந்தாலும் எமது முயற்சி வலிமையால் அந்தச் சிறகைச் சரியாகப் பொருத்தித் தமிழ் வானில் சிறகடிக்கலாம். எம் எண்ணப்படி தமிழை வரையலாம். இதைத் தான்
‘ எதைச் சொல்ல நாங்கள் எண்ணினாலும் அதைச் சொல்ல எங்களுக்கு
முன் எண்ணும் தமிழ் ‘ என்கிறார் ஐயா. மனம் கவர்ந்த வரிகள்.
‘ விதைகளை நாங்கள் கையில் வைத்திருப்போம்
விளைச்சலை அது நிலத்தில் வைத்திருக்கும்.
அகரத்தில் நாங்கள் கால் ஊன்றுமுன் தமிழ்
ன கரத்தில் வெற்றிக் கொடி ஏற்றிவைக்கும் ‘
என்கிறார் ஈரோடு தமிழன்பன். ஆகா! எவ்வளவு ஆழமான ஈர்க்கும் வரிகள்.
குடும்பப் பெருமையை நற் துடுப்பாக்கி;இ
வடுவில்லாப் பக்கங்கள் வாழ்வில் பெருக்க
சிடுசிடுப்பற்ற புன்னகை பலமாக்கும்.
அகண்ட சாதனையாக்கும் திறவுகோல்
மிக உண்மையான மன விருப்பமே!
அகம் காதலுடன் தூரிகையாகும்.
முகவுரை, அட்டைஇ முடிவுரை தானாக விரியும்.
கணவர், குழந்தைகள், பெற்றோர், பேரப்பிள்ளைகள்
உணர்வுடை பளபளக்கும் தங்கப் படங்கள்!
வாழ்க்கைப் புத்தகத்தில் திணறடிக்கும் இறைப் பரிசுகள்.!
வணங்கிடும் சிறப்புடை ஆசீர்வாதங்கள்.!
மூச்சிரைக்கும் வாழ்வென்பது உண்மையே!
ஆச்சரியம்இ ஓட்டப் பந்தயமே! வாசிப்பால்
நீச்சலடித்து அறிஞர் நல்லறிவைக் கொய்து
முயற்சியுடன் வாழ்வில் வெற்றி பெறுவோம்.
வாழ்க ஐயாவின் புகழ்! ஆரோக்கியம்! அறிவு!
வேதா. இலங்காதிலகம் (இலங்கைத் தமிழச்சி)- டென்மார்க்.
ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை
பங்குனி – 2021.