கவின் தமிழைத்தான்.- மீனையல்ல..
வினாவாரியாக -4
00
கவின் தமிழைத்தான்.- மீனையல்ல..
00
(மலரோன் – பிரம்மா. சலநிதி – கடல்)
00
மலர்கள் பேசும் மொழியுனக்குப் புரியுமா
மலரோன், திருமகளுக்கும் புரியாத மொழியன்றோ.
காற்றின்மொழிக் காவியங்கள் எத்தனை சொல்வாயா
நூற்றில் பலவுண்டு நூலகத்தில் அடுக்கலாமா
அலைகள் உருளாவிடிலந்த நீரெங்கு போகும்
ஆழங்காண அதுவுருண்டு முத்துக் குளிக்குமோ
பனி கரைந்து தான் பரந்த சலநிதி ஆனதோ
இனி புகுந்தகமென்று ஆவியாகி மேலெழும்புமோ
காடழித்து மழையில்லையானால் புவனம் பாலைவனமே
காணிக்கையாய் யார் தருவாருயிரிற்குப் பிராணவாயு
இயற்கையுயிர்த்து மலர்களை அன்பளித்தால் மனிதன்
இரக்கமின்றி ஏன் மரங்களைத் தறிக்கிறான்.
தயக்கமென்ன மனிதன் சுயநலவாதி தான்.
நீரிலும் மீனை விட்டு வைக்கிறானா மனிதன்.
தாவரபட்சணி வேதா. இலங்காதிலகம் கவிதை வலையில்
பாக்களை, கவின் தமிழைத்தான் பிடிப்பாள் மீனையல்ல.
00
12-6-2021