153. சான்றிதழ்கள் – கவிதைகள் 150

நான் காணும் உலகம்

August 20  · 

நான் காணும் உலகம் நடாத்தும் கவிதைப் போட்டி -2022

போட்டி இலக்கம் : 68

போட்டியாளர் : வேதா.இலங்காதிலகம் – தென்மார்க்

தலைப்பு – பழமையின் மகிமை

::::::::::::::::::::::::::

25. பாமாலிகை (தாய்நிலம்.) 60. விழித்தெழு தாயகமே!

விழித்தெழு தாயகமே!

செழித்த நல் சிறப்புகளை முற்றாக
மழித்துச் சுருட்டிட ஒரு படையாக
வழித்து நாளும் விவரமாய் வேட்டையாடுகிறது.
விழித்தெழு என் அருமைத் தாயகமே!
00

அறிவைப் பாவித்து அகந்தையை அழித்து
குறிவைத்து உயர் குடியாக நாட்டை
நெறியோடு நடத்தி நன்னிலை காண
வெறியோடு செல்ல விழித்தெழு தாயகமே!
00
ஒருமைப்பாடு ஒடுங்காது ஒற்றுமை ஓங்கி
ஒருமித்து மடமையை ஒழித்து விழித்து
அருமை மொழியாம் அன்னைத் தமிழோடு
செருக்குடன் நாட்டை சிறப்பாக்க விழித்தெழு!
00
அதிகாரம் எம்மை அதட்ட விடாது
மதியோடு அன்பை முன்னெடுத்து நல்ல
புதிய உதயம் வெளித்திட எம்
புத்தியோடு தன் மானமாய் எழுவோம்.
00

12-7-2022