13. சான்றிதழ்கள் – கவிதைகள் (23. தந்தை போலாகுமா!)

 

kampan 28-11-16

*

கம்பன் கவிக்கூடம்
நட்புறவுகளுக்கு வணக்கம்
**********************************எமது கவிக்கூடத்தில்
தந்தை போலாகுமா – என்ற தலைப்பில்
நடைபெற்று முடிந்த புதுக்கவிதை போட்டியின்
வெற்றியாளர்.

***********************************
கவிதாயினி. வேதா இலங்கா திலகம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அவர்களுக்கு
கம்பன் கவிக்கூடம்
குழு நிர்வாகத்தினரின்
வாழ்த்துக்கள் .
இவர்களுடன்
உங்கள் கவிப் பிரியன்

 

கம்பன் கவிக் கூடம். கவிதை.

தந்தை போலாகுமா!

*

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய் 
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-11-2016

*

 

blackwith colour

12. சான்றிதழ்கள் – கவிதைகள் (22.சினத்தை அடக்கினால் சிகரமாய் உயர்வாய்)

 

 

puthumao11-2016

*

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயர்வாய்

*

தனம் இருந்தென்ன தகவற்ற குணம்
சினம், கனம் கவலை தரும்.
தினம் தொல்லை, தாக்கம், பெரும்
கனவுகள் காற்றோடு அடித்துச் செல்லும்.

வனப்புடை மானிடத்தின் கொள்ளிவாய்ப் பிசாசு
வினயம் மிகு சுனாமி அலை.
இனத்தையும் அழிக்கும் முயலாமை, இயலாமையால்
மனித நந்தவனத்துள் சொரியும் அனல்.

காரமிகும் சினம் சூழ் வாழ்வு
தாரம் தனயன் வாழ்வையும் அழிக்கும்.
சாரமிகு உறவுகள் சிதைக்கும். அரசன்
இராவணன் சினம் இலங்கையை அழித்தது.

சினம் அடக்கில் சீறுமுன் சக்தியாதலால்
சினமெனும் மலையால் குப்புற வீழாது
மனமெனும் மாளிகை அமைதியால் கட்டு!
ஐனனமீடேறும் அறிவுப் புனலாலழி சினத்தை.

சின்னத்தனமிது! விலக்கு! அமைதி மெழுகும்!
அன்பொழுகும் மொழியால் ஆரத் தழுவு.
நன்மையால் கடைந்த வார்த்தைகளைக் கொளுவு.
இன்பமாய் இதமாய் உயிர் தழுவும்.

கணப் பொழுதும் காத்திடும் சினத்தால்
மணம் பெறுவாய் உயரோட்டச் சமூகத்தில்.
பணம் தராத நிலையும் அடைவாய்.
கணம் சினம் உன் குணமழிக்கும்.

மலர்ந்து நுகரும் வாழ்வுத் தோட்டம்
உலர்த்தும் குணம் மறத்தல் ஊட்டம்.
பலர் சினக் கழிவில் முக்குளித்து
புலர் விடியலை அனுமதிக்காது கொப்புளிக்கிறார்.

துச்சமாய் இருள் வனத்துளுன்னைத் தள்ளி
எச்சங்களில் நடக்கும் வாழ்வாய் சினமுன்
உச்சம் எரிக்கும் அச்சம் அகற்று!
மச்சமுடன் புகழ் முத்துக் குளிப்பாய்!

*

 

2081166qmwwivarb1

11. சான்றிதழ்கள் – கவிதைகள் (21 கிராமத்தில் மழை)

 

amirtha kiramiy.18-2-17
*

நமது குழுமத்தில் சென்ற 17/02/17 மற்றும் 18/02/17 அன்று நடைபெற்ற 
கிராமியக்கவிதைபோட்டியில் பங்கேற்று கவிதை படைத்த கவிஞர்களுள் சிறந்தகவிதை படைத்து சான்றிதழ் பெறுகிறார். 
திரு.கவிஞர். வேதா. இலங்காதிலகம்

அவர்கள்.
அவருக்கு கவிஞர் ஜெயசுதா . நடுவர் பணிபுரிந்த அ.முத்துவிஜயன் மற்றும்

அமிர்தம் குழு சார்பாகவும் இனிய வாழ்த்துகள்

 
 அமிர்தம் -கிராமியக்கவிதை

*
 கிராமத்தில் மழை

*

மழை சோவென்றது வானம் பொத்தலானது.
மண்ணிலே நைல் நதி பெருக்கெடுத்தது
மனதிலே ஆனந்தம் பொங்கி வழிந்தது.
மளமளவென பழைய கடதாசிகள் தேடியது.

காகிதக் கப்பற் படை வரிசையானது.
கலங்கிய நதியில் ஓட்டியது நினைவது.
இந்தக் குசுனிக் குடிசையிலிருந்து ஓடியது
அந்தத் தலைவாசல் குடிசைக்கு கைகுடையானது

மழையில் நனைய அம்மாவின் ஏச்சு
ஏழைகள் வாழையிலைக் குடையோடு உலா.
ஓலை பின்னிய குடையோடும் சிலர்
மழையால் கிராமத்தில் பசுமைத் திருவிழா .

தெருவோர வயலின் நெற்கதிரின் குளிப்பு
பெருவானப் பிரதிபலிப்பால் வெள்ளை வெள்ளம்.
ஒரு மாயவழகு வெள்ளையுள் பசுங்கதிர்.
அரும் பட்டிமன்றம் தவளைகள் இராகம்..

புதிய பூங்கன்றுகள் ஈரநிலங் கொத்தியெழும்.
மயிர்கொட்டிப் புழு படையெடுப்பு மழையாலில்லை
கூரை வானத்தாரை வாளியில் நிறைத்து
கூத்தாடி மழையோடு மழையாய்க் குளிப்பு.

*

17-2-2017.  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

lines-c

3. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (புதியதோர் உலகு செய்வோம்.)

 

 

sanka-baraaatthy
*
 
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்

28/02/2017 நாள் நடந்து முடிந்த புதியதோர் உலகு செய்வோம் எனும் தலைப்பில் பாரதிதாசன் போட்டியில் 
கவிதை எழுதிய

கவிஞர் [ இலங்கா திலகம் வேதா]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்.

*

சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா. 28-2-2017
பாரதிதாசன் போட்டியாளர் – வேதா. இலங்காதிலகம்
டென்மார்க். 

*

புதியதோர் உலகு செய்வோம்.

*

புதியதோர் உலகு செய்வோம்
விதியதை மாற்றி நெய்வோம்.
இதிகாசங்கள் காலத்திற்கும் பேச
மதியதின் செயற்பாட்டை முடுக்குவோம்.

பஞ்ச மகா பாதகங்கள்
நஞ்சுடைய செயலெனப் பாலகருக்கு
பிஞ்சு வயதிலேயே புகட்டுவோம்.
நெஞ்சிலே நன்னெறிகள் ஊட்டுவோம்.

மரங்கள் நட்டு பாதுகாத்து,
வரமெனும் மழை பெற்று
தரமுடை மண் வளத்தைக்
கரம் குவித்துப் பெறுவோம்.

மூடநம்பிக்கைகள் கேடுகள் அழித்து
ஆடவரோடு பெண்டிர் கல்வியையும்
தேடிடக் கை கொடுப்போம்.
கூடிடுவோம் நீதியே கொடியாக.

ஓற்றுமையாம் கூட்டுறவு பெருக்கி
கற்றவரான உலகு அமைப்போம்.
அற்புதச் சுகாதாரம் உயர்த்துவோம்.
சுற்றம் பேணிச் சுகமாவோம்.

அன்பே தாரக மந்திரமாகி
வன்முறை அற்ற உலகை
தென்புடன் இணைந்து உருவாக்குவோம்.
இன்பமான புத்துலகு அமைப்போம்.

 

2081166qmwwivarb1

2. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன் – விழி கூறும் மொழி கேளாய்

25 February · 2017

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..

வணக்கம் கவி உறவுகளே..

சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 24/02/2017 தின பாரதிதாசன் போட்டியில், விழி கூறும் மொழி கேளாய் என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களை குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.

*

பாரதிதாசன் போட்டியாளர் – 24-2-2017 சங்கத் தமிழ் கவிதை
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். தலைப்பு:- 

 

விழி கூறும் மொழி கேளாய்

*

மொழியற்ற என் ஆழ்ந்த காதல்
விழி கூறும் மொழி கேளாய்!
அழிப்பான் இல்லாத வட்டத்தில் விரியும்
எழில் காதல் மன்மத அம்பிது.

விழி என்ற சிற்பி செதுக்கும்
இழிவற்ற உன்னதக் காதல் கலையிது.
செழித்திடக் கடைக் கண் காட்டு!
பொழிவுடை வாழ்வு விரித்துக் களிப்போம்.

மொழிப் பின்னல் தொடர்பு, உயிர்
வழி செல்லும் அற்புதப் பயிர்!
கொழித்த உறவு பெருகும் நந்தவனம்
விழி கூறும் மொழி இன்பமானால்!

காந்த விழி அன்பால் என்னை
ஏந்தட்டும்! விலையில்லா உறவு இது!
வந்து தந்திடுவாய் காத்திருப்பேன் உனக்காக.
சொந்தமாக்கு கண்ணாளன் என்ற உறவை!

*

31851321-certificate-template-vector

1. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.(இந்த உலகில் செழித்த இனமா இது..)

 

 

sanka-barathy -1

*

Zegu Zeguசங்கத்தமிழ் சான்றிதழ் பதிவு குழுமம்

Admin · 30 January near Periyaneelavanai, Sri Lanka ·

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே. 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
27/01/2017ம் நாள் இந்த உலகில் செழித்த இனமா இது
என்றதலைப்பில் நடந்து முடிந்த சிறப்பு கவிதைப்
போட்டியில்  கவிதை எழுதிய கவிஞர்

[வேதா . இலங்காதிலகம்]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்

*

16265970_636061046578637_2010371738325859372_n

*

பாரதிதாசன் கவிதைப் போட்டி

*

தலைப்பு ஆரம்பம்:- உலகில் செழித்த இனமா இது
முடிவு:- இந்தப் பிறப்பு வேண்டாம் வெளியேறுகிறேன்.

உலகில் செழித்த இனமா இது!
பலரின் கேள்வியிதை அழிப்பது தோது
நிலவுலகில் அரிதான பிறவி மானுடம்
பல திறமை வளர்த்துயர்ந்தால் சீரிடம்.

அங்கங்கள் குறைவின்றிப் பிறத்தல் அரிது.
முங்கித் தமிழ் முத்தெடுக்கக் கருது.
மங்காத மொழிச் சிகரமேறல் பெரிது.
பங்கமற்று அறவழி வாழ்தல் விருது.

நன் மனக்கட்டுப்பாடு, சிந்தனைத் திறமை,
நன்னெறி, நற்செயலோடு இறை பக்தியை 
தன் வழி சிறக்கக் கொள்வார் கல்வியாளர்.
வன்முறை வாழ்வாளரை மாற்றும் பண்பாளர்.

மனித சக்திக்கு இணையே இல்லை.
மனிதன் இறைவனுக்குச் சமம். தவறுவோரை
இனிய வழிக்கழையுங்கள்! தீய கூற்றன்றோவிது
இந்தப் பிறவி வேண்டாம் வெளியேறுகிறேன்!

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 27-1-2017

*

0066

 

10. சான்றிதழ்கள் – கவிதைகள்-20

 

 

nilachoru-24-3-17

*

6 சொற்கள் அதன் #பொருளுடன்தரப் பட்டுள்ளது. 

** அந்தத் தமிழ் சொற்களைக் கொண்டு இனிக்க இனிக்க அற்புதமாகக் கவிதை 

thaaa

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 24-3-2017

நுரை # வீ, க்கள் சுமந்து
தரை விட்டு # வீழருவி
உரைப்பது என்ன உலகிற்கு!
வரை விலகினால் வாழ்வில்
வரைநீர் (மலையருவி) போல் வீழ்வாயென்றா!

#ஆசு விலகிய # வீழருவி
தூசுடை மேகங்களிணைவது போல்
தேசுடன் ஒளிர்வது வியப்பு!
வீசியுரசும் நீரின் ஒலி
மேகமுரசும் #இகளியாகஇல்லையே!

பொன்றாத (அழியாத) இயற்கைப் பொற்சித்திரமிது!
நன்றிந்த இராட்சத நீர்ப்பாய்ச்சலில்
சின்னவுயிரினம் # கயல் # கமடம்
தன்னாலே வீழ்ந்து சாகுமா!
அன்றியதுவும் கடந்து போகுமா!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 24-3-2017
_____________

 

 

தமிழ்-சித்திரை-புத்தாண்டு-வாழ்த்துக்கள்-52650-18758

7. கண்ணதாசன் சான்றிதழ் (24)இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்…..

 

kavichatal - elakkanaththil valli-7-3-17

*

Poongavanam Ravendranதமிழமுது கவிச்சாரல்

· 10 March ·

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 7–3–17 நாளாம் போட்டி கவிதையின்

#தலைப்பு__#இலக்கணத்தில_வல்லினம்_காணவில்லையாம்_எடுத்து_சென்றாயோ_நீ_ஏதும் தொடரவும் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

*
தலைப்பு:- இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்….

இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்
அன்றி துலக்குவாயோ அழகாக
மூன்று இன எழுத்துகளறிவாயா!

கசடதபற – வல்லினம் கட்டுவாயா!
ஙஞணநமன – மெல்லினமா ! அன்றி
யர லவழள – இடையினமா சொல்!
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இது.

இது எம்மொழி நம்மொழி.
வல்லொலிகள் கொண்ட மெய்யெழுத்து.
வல்லினமும் உயிரெழுத்தும் சேர்ந்து
நல்ல தமிழ் உருவாகும்.

வல்லினத்தை மெல்லினம் திருடுமா!
வலிமை போதாதிருக்கலாம் அன்றோ!
வல்லினம் இடையினத்தில் ஒளிந்திருக்க
நல்ல வாய்ப்புண்டு காமமிகுந்தால்.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவில்
வல்லினம் மிகாது. அத்தனை,
இத்தனை, எத்தனையிலும் மிகாது.
அஃறிணைப் பன்மையிலும் மிகாது.

எட்டு பத்து தவிர
மற்றைய எண்கள் பெயர்
பின் வரும் வல்லினம்
மிகாது என சிறிதறிவோம்.
*

7-3-2017   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

31851321-certificate-template-vector

6 . கண்ணதாசன் சான்றிதழ்(23) சூது கவ்வும் வாழ்வு

 

 

kavichatal-suthu kavvum 2-3-17

*

Poongavanam Ravendranதமிழமுது கவிச்சாரல்

Admin · 3 March ·

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 1–3–17 நாளாம் போட்டி கவிதையின்

#தலைப்பு_#சூது_கவ்வும்_வாழ்வு 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழமுது கவிச்சாரல். 28-2-2017
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*
சூது கவ்வும் வாழ்வு

*

சூது கவ்வும் வாழ்வு.
வாது வஞ்சம் சூழ்வு.
பாதுகாப்பு இல்லா தாழ்வு.
வேதனைக் குளத்தில் ஆழ்வு.
ஏது நிம்மதியென ஆய்வு.

நீதி நேர்மையில் தோய்ந்து
பீதி விலகிய அன்பிலாழ்ந்து
ஆதிசிவனின் பக்தியை மோந்து
மதியைப் புகுத்தித் திடமாய்
விதியை வெல்வது நிம்மதி.

கேடுடை சகவாசம் விலக்கி
கேள்வி கல்வியைப் புகுத்தி
நாடும் நல்லுள்ளங்களை அணைத்து
நல்லவை உலகிற்குச் செய்தால்
தொய்வில்லா ஆனந்தம் கூடும்.

சூது கவ்வி இருண்டது
மகாபாரதக் காவியம். பின்பு
சாகாத தர்மம் வென்றது.
கார்மேகமும் சூதாகவே கப்புகிறது.
தர்மமே மழையாகி வெல்கிறது.

சூசகமின்றி சூது வரும்.
சூக்குமம் அறிந்து தந்திரமாய்
சூட்டிகையாய் வெல்லல் திறமை.
நம்ப நட, நடவாதே
நம்பி. இதுவே வெற்றியாகும்.

*

blackwith colour

 

5. (பாமாலிகை (தமிழ் மொழி. 52). எழுத்து.5

dsc_0023

*

எழுத்து – 5

*

முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து
மென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.
என்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை
பன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக
உன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்
முன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.
மென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து
முன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.
*
மூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து
பூச்சான உலகில் உண்மையான உயர்வு.
நீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).
தீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.
அச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.
உச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.
பச்சை உண்மைகளே பதியப் படுகிறது.
துச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.
*
நாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்
ஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே
தோள் கொடுத்துத் துணை வருகிறது
நாள் கிழமை பார்க்காத உலா.
நீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ!
வேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்
தாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.
கேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்!
*
 
முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து
மென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.
என்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை
பன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக
உன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்
முன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.
மென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து
முன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.
*
மூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து
பூச்சான உலகில் உண்மையான உயர்வு.
நீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).
தீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.
அச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.
உச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.
பச்சை உண்மைகளே பதியப் படுகிறது.
துச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.
*
நாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்
ஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே
தோள் கொடுத்துத் துணை வருகிறது
நாள் கிழமை பார்க்காத உலா.
நீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ!
வேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்
தாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.
கேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்!
*
Vetha.langathilakam -Denmark. 4-11.2917
*
Swirl divider v2