யானை
(அன்புள்ள முட்டாள் – யூரியூப் தலையங்கம்)
மானை அழகிற்கு உவமித்தால்
ஏனைய விலங்குகளில் உருவில்
யானை பெரிதென அறிவோம்.
சேனையும் நடுங்கும் உருவம்!
யானையால் என்றும் தெய்வம்
ஆனைமுகத்தான் நினைவு வரும்.
ஆனைகளிருபத்திரண்டு வகைகள், எஞ்சியது
ஆபிரிக்கப் புல்வெளி யானை,
ஆபிரிக்கக் காட்டு யானை,
ஆசிய யானை களனைத்தும் தாவர உண்ணிகள்.
ஆபிரிக்கயானைகள் உருவில் பெரியது.
ஆண் களிறு, பெண் பிடி.
எம்பெருமானே! நாற்பதாயிரம் தசைகளுடைய
தும்பிக்கை சிறந்த உறுப்பு.
நம்புங்கள்! நான்கு லிட்டர் நீர் கொள்ளும்
தும்பிக்கையால் சுவாசிக்கும்.
வாயினால் வாசனை அறிகிறது.
வாசனை நரம்புகள் இங்குள்ளது.
தந்தம் (பல்) கடைவாய்ப் பற்களின் நீட்சி
அந்தளவு விலையுயர்வால் உயிராபத்து
ஆசியப் பெண்யானைக்குத் தந்தமில்லை.
தந்தம் யானைக்கோடு, எயிறு
கர்ப்பகாலம் இருபத்திரண்டு மாதம்.
கன்று ஈனும், பாலூட்டுமினம்.
முன்னம் கால்களிடையில் பாற்சுரபியுண்டு.
புதிய பிரசவத்தால் மகிழுமினம்.
பிரமிப்பு! யானைக் கூட்டத்தின்
அரவணைப்பில் கன்று வளர்க்கப்படும்.
கன்றினெடை இருநாறு இறாத்தல்
மனிதக் குழந்தைகள் முப்பதிற்கிணை.
பிரத்தியேகமாக ஈனும் போதும்
பிரசவத்தின் முன்னும் பின்னும்
பிரதானமாக வளர்ந்த யானைகள்
பிரசன்னமாகி ஒருவருக்கொருவர் உதவுவர்.
பெரிய யானைகள் வாலைப் பிடித்துக்
குட்டி யானைகள் நடக்குமாம்.
பிறந்தவுடன் கன்றுக்குக் கண்பார்வை தெரியாது.
உறவுமுறையமைந்த சமூக உணர்வுடையது.
இறுதிவரை கட்டுக்கோப்புடன் வாழுகிறது.
இரண்டு – இருபத்தொன்பது வரை
இணைந்து குழுவாக வாழுமினம்.
எண்ணிக்கையதிகமானால் பிரிந்து வேறாவர்.
தேக வெப்பம் அடக்க
தன்மீது மண் வாரிப்போடும்.
காதுகளின் அசைப்பில் இரத்தம்
குளிராக்கி உடற்சூடு வெளியேற்றுகிறது.
இருநூறு லிட்டர் நீரருந்தும்.
நூறு முன்னூறு கிலோ உணவுண்ணும்.
குழுவில் முதிர் பெண்யானை வழிகாட்டி.
இறப்பில் குழுயானைகளுக்காக அழுகிறது.
பெண் யானைக்கு மதம் பிடிக்காது.
பதினான்கு வயதில் தொழிற் பயிற்சி.
நீந்தும் திறனுடையது.
தமக்குள் பேசிக் கொள்ளுமினம்
ஆனை தலைசிறந்த இயற்கையின் படைப்பு
பளுவான வேலைகள் இருபத்தைந்து
வயதின் பின்னர் செய்வன.
முப்பத்திரண்டு கி.மீ வேகத்திலோடும்
காடுகளை வளர்த்தாலெம் நண்பனாகும்.
நோயுற்ற யானைகள் ஒருவருக்கொருவருதவுவர்.
ஒரு கி.மீட்டருள்ளே நீருள்ள
இடமறியும் திறனுடைத்து. சுதந்திரம்
காட்டில், பாகனிடம் அடிமை
காடு வளர உதவும்
ஆலய அரசபணி செய்யும்.
யானைக்குத் தேனீ பிடிக்காது.
25-8-2020
( தாயும் பிள்ளையும் உள்ள இந்தப் படம்என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்காகவேஇதை எழுதினேன். கூகிள் எனது கணனியில்முகப்பில் போட்ட படம்)