*
பேரண்டப் பெருவெளி.
*
நட்சத்திரங்கள், கோள்கள், மனிதனியக்கும் கருவிகள்
தட்டாமலையாகச் சுற்றும் பேரண்டப் பெருவெளி.
வெட்ட வெளி, ஆகாயம் விதானமென்றும்
வட்டம் சுற்றும் காற்று மண்டலமுமிணைந்தது.
*
அறிவியலிற்கு எட்டாத மன எல்லைகள்
முறிவற்று விரிக்கும் பால் வெளி பூமியும்
தெறிக்கும் ஒளியீயும் சூரியனும் தவிர
பிறிதொரு எல்லையுண்டோ பேரண்டப் பெருவெளிக்கு!
*
நிறை விசை, அலை குன்றிய விசை,
மின்காந்த விசை, ஈர்ப்பு விசைகளடங்கிது,
அணு, அணுத்துகள்களால் உருவான கோள்கள்
பிரபஞ்சப் பகுதிகளாகுமாம் அறிவியற் கூற்று.
*
ஆழம், பாரம் அறியாதது, முடிவு
ஆரம்பம் அறிய முடியாதது ஆகாயம்.
எம் மனமும் அது போல
தெய்வ நம்பிக்கையில் புவியில் சுழருகிறோம்.
*
ஆறிவியல் வெற்றியால் மனிதன் நிலவில்
குறியாகக் காலடி வைத்தின்னும் ஆராய்கிறான்.
காற்று மண்டலம் போர்த்திய வெளி
சூலுடை மேகங்களும் பேரண்டப் பெருவெளியாகிறது.
*
இஸ்லாமியத்தில் பிரபஞ்சத் தகவல்கள் அதிசயம்.
சூரியன், பூமி, நிலா நட்சத்திரங்களே
பிரபஞ்சமா! அறிய முடியாத அதிசயம்.
ஆய்வுகள் தொடரும் ஆழ் வெளியிது
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-5-2017.
*
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3916:2017-05-31-06-28-29&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23
LikeLike
அருமை
LikeLike
மிக நன்றி தங்கள் கருத்திடலிற்கு.
மனம் மகிழ்ந்தேன்.
LikeLike
அருமை அம்மா…
LikeLike
தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி
மனம் மகிழ்ந்தேன்.
LikeLike
//பேரண்டப் பெருவெளி//
அழகிய விளக்கம் அருமை சகோ வாழ்த்துகள் இன்றுதான் குறுக்கு வழியில் தங்களது தளம் கண்டு வர முடிந்தது இனி தொடர்வேன் சகோ.
LikeLike
மனம் மகிழ்ந்தேன்.
தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி .
எனது வலை இணைப்பை எனது கருத்திடலோடு இணைப்பது வழமை
LikeLike