23. கண்ணகி(10)- மணிமேகலை(10) கம்பர் (3) – சான்றிதழ்கள் – கலை வாழ்வும் கவிதைத் தமிழும்.

கலை வாழ்வும் கவிதைத் தமிழும்.

கலை வாழ்வும் கவிதைத் தமிழும்
விலையின்றிப் பின்னியது தமிழர் வாழ்வில்
கலைநயமிகு மூவேந்தரே மையலுற்று வளர்த்தார்.
சிலை சிற்பமதிசய மாமல்லபுரமும் ஒப்பில்லா
மலைகுடைந்த தஞ்சைப் பெரிய கோவிலுமாதாரம்.
மலைப்புடைய இயலிசை நாடகம் வில்லுப்பாட்டென
அயல்நாட்டிலும் புலம் பெயர் தமிழரும்
புயலென வளர்க்கிறார். உலகமயம் ஆகிறது.

பொம்மலாட்டம், நாகசுரம், கெட்டி மேளம்
எம்மவர் விழாக்களிலெங்கும் பறை கொட்டியுயருகிறது.
நம்மவர் கவிதையுருவாக்கம் நாள்தோறும் வெளியீட்டுலா.
கும்மியடிக்கிறது இணையத்தளம் முகநூல் கவிதைவிழாவென.
யாரடித்து நீயழுதாய்!…. நிலாவை கிளியை
ஓடிவாவென தமிழிசையுயர்ச்சி தாலாட்டு, நாட்டுப்பாடலென.
ஆடியோடும் பிள்ளைகள் திருக்குறள் விழாக்களில்
சூடுகிறார்கள் மகுடம் பேச்சுக்கலை பட்டிமன்றமாக.

வரலாற்றுப் பதிவான பரதம், இசையும்
திரைப்படக்கலையும் அகம் – புறமாய் உயர்கிறது.
ஊடகக்கலையுயர இளையோர் தன்னிகரற்ற சுயகவிதையால்
இறுவெட்டுகள் பெருக்கம் சங்கத் தமிழாயுயர்ந்து
வறுமையின்றித் தாமரையில் தமிழாக நிபுணத்துவமாகிறது.
முறுவலுடை நகைச்சுவைக் கலையும் எழுச்சியாகட்டும்
மறையாது பண்பாட்டுடன் தனித்துவமாக வளரட்டும்!
அறுபத்துநான்கு கலைகளோடு கவிதைத் தமிழுமுயரும்!

( நாகசுரம் – நல்ல தமிழ்ப் பெயர்)

28-12-2017

3 thoughts on “23. கண்ணகி(10)- மணிமேகலை(10) கம்பர் (3) – சான்றிதழ்கள் – கலை வாழ்வும் கவிதைத் தமிழும்.

பின்னூட்டமொன்றை இடுக